23.
காமம் மிக்க கழிபடர் கிளவி |
|
|
|
வானவர்க்கு
இறைவன், நிலம் கிடை கொண்டு, |
|
திரு
உடல் நிறை விழி ஆயிரத் திரளும் |
|
இமையாது
விழித்த தோற்றம் போல, |
|
கஞ்சக்
கொள்ளை இடையற மலர்ந்து, |
|
மணம்
சூழ் கிடந்த நீள் கருங் கழியே! |
5
|
கருங்
கழி கொடுக்கும் வெள் இறவு அருந்தக் |
|
கை
பார்த்திருக்கும் மடப் பெடைக் குருகே! |
|
பெடைக்
குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு |
|
காவல்
அடைகிடக்கும் கைதைஅம் பொழிலே! |
|
வெம்மையொடு
கூடியும், தண்மையொடு பொருந்தியும், |
10
|
உலக
இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர், |
|
காலம்
கோடா முறைமுறை தோற்ற |
|
மணி
நிரை குயிற்றிய மண்டபம் ஆகி; |
|
பொறை
மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள் |
|
களையாது
உடுக்கும் பைந் துகில் ஆகி; |
15
|
வேனிற்
கிழவன் பேர் அணி மகிழ, |
|
முழக்காது
தழங்கும் வார் முரசு ஆகி; |
|
நெடியோன்
துயிலா அறிவொடு துயில, |
|
பாயற்கு
அமைந்த பள்ளியறை ஆகி; |
|
சலபதி
ஆய்ந்து, சேமநிலை, வைத்த |
20
|
முத்து
மணி கிடக்கும் சேற்று இருள் அரங்காய்; |
|
புலவு
உடற் பரதவர் தம் குடி ஓம்ப, |
|
நாளும்
விளைக்கும் பெரு வயல் ஆகி; |
|
கலம்
எனும் நெடுந் தேர் தொலையாது ஓட, |
|
அளப்பு
அறப் பரந்த வீதி ஆகி; |
25
|
சுறவ
வேந்து நெடும் படை செய்ய |
|
முழக்கமொடு
வளைத்த அமர்க்களம் ஆகி; |
|
மகரத்
தெய்வம் நாள் நிறைந்து உறைய, |
|
மணி
விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி; |
|
நீர்
நெய் வார்த்துச் சகரர் அமைத்த |
30
|
தீ
வளர் வட்டக் குண்டம் ஆகி; |
|
எண்
திகழ் பகுவாய் இன மணிப் பாந்தள்- |
|
தண்டில்
நின்று எரியும் தகளி ஆகி; |
|
பஞ்சவன்
நிறைந்த அன்புடன் வேண்ட, |
|
மாறிக்
குனித்த நீறு அணி பெருமாற்கு |
35
|
அமுத-போனகம்
கதுமென உதவும் |
|
அடும்
தீ மாறா மடைப்பள்ளி ஆகி; |
|
இன்னும்
பலவாய் மன்னும் கடலே! |
|
நுங்கள்
இன்பம் பெருந் துணை என்றால், |
|
தண்ணம்
துறைவற்கு இன்று இவள் ஒருத்தி, |
40
|
நெருப்பு
உறு மெழுகின் உள்ளம் வாடியும், |
|
அருவி
தூங்கக் கண்ணீர் கொண்டும், |
|
அரவின்
வாய் அரியின் பலவும் நினைந்தும், |
|
நிலையாச்
சூளின் நிலையா நெஞ்சம் |
|
கொண்டனள்
என் என, என் முகம் நாடி, |
45
|
உற்ற
வாய்மை சற்றும் தருகிலீர் |
|
அன்று
எனின், நும்மின் ஒன்று பட்டு, ஒருகால், |
|
'இவளோ
துயரம் பெறுவது என்?' என்று |
|
வினவாது
இருக்கும் கேண்மை, |
|
மனனால்
நாடின், கொலையினும் கொடிதே! |
50
|