26.
இரவுக் குறி வேண்டல் |
|
|
|
வள்ளியோர்
ஈதல் வரையாது போல, |
|
எண்
திசை கரு இருந்து, இன மழை கான்றது; |
|
வெண்
நகைக் கருங் குழல் செந் தளிர்ச் சீறடி |
|
மங்கையர்
உளம் என, கங்குலும் பரந்தது; |
|
தெய்வம்
கருதாப் பொய்யினர்க்கு உரைத்த |
5
|
நல்
வழி மான, புல் வழி புரண்டது; |
|
காலம்
முடிய, கணக்கின் படியே, |
|
மறலி
விடுக்க வந்த தூதுவர் |
|
உயிர்தொறும்
வளைந்தென, உயிர் சுமந்து உழலும் |
|
புகர்மலை
இயங்காவகை அரி சூழ்ந்தன; |
10
|
(வெள்
உடற் பேழ்வாய்த் தழல் விழி மடங்கல்- |
|
உரிவை
மூடி, கரித் தோல் விரித்து, |
|
புள்ளி
பரந்த வள் உகிர்த் தரக்கின் |
|
அதள்
பியற்கு இட்டு, குதி பாய் நவ்வியின் |
|
சருமம்
உடுத்து, கரும் பாம்பு கட்டி, |
15
|
முன்பு
உகுவிதிகள் என்பு குரல் பூண்டு, |
|
கருமா
எயிறு திரு மார்பு தூக்கி, |
|
வையகத்
துயரின் வழக்கு அறல் கருதி-- |
|
தொய்யில்
ஆடும் கடனுடைக் கன்னியர் |
|
அண்ணாந்த
வன முலைச் சுண்ணமும் அளறும், |
20
|
எழிலி
வான் சுழலப் பிளிறு குரற் பகட்டினம் |
|
துறை
நீர் ஆடப் பரந்த கார் மதமும்; |
|
பொய்கையும்,
கிடங்கும், செய்யினும் புகுந்து; |
|
சிஞ்சை
இடங்கரை, பைஞ் சிலைச் சேலை, |
|
உடற்
புலவு மாற்றும் படத்திரை வையை |
25
|
நிறைநீர்
வளைக்கும் புகழ் நீர்க் கூடல்-- |
|
வெள்ளிஅம்
பொதுவில், கள் அவிழ் குழலொடும் |
|
இன்ப
நடம் புரியும் தெய்வ நாயகன்) |
|
அருவி
உடற் கயிறும், சுனை மதக் குழியும், |
|
பெருந்தேன்
செவியும், கருந் தேன் தொடர்ச்சியும், |
30
|
ஓவா,
பெரு மலைக் குஞ்சரம் மணக்க, |
|
வளம்
தரும் உங்கள் தொல் குடிச் சீறூர்க்கு, |
|
அண்ணிய
விருந்தினன் ஆகி |
|
நண்ணுவன்--சிறு
நுதற் பெரு விழியோளே! |
|