27. நகர் அணிமை கூறல்  
 
புயற்கார்ப் பாசடை, எண்படப் படர்ந்த,  
வெள்ளப் பெரு நதி கொள்ளை முகம் வைத்து,  
நீட, நிறை பாயும் வான வாவிக்குள்  
ஒரு செந்தாமரை நடு மலர்ந்தென்ன,  
மூஅடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு,
5
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய  
கருங் கடல் வண்ணன் செங் கருங் கரத்து  
ஒன்றால் இரு மலை அன்று ஏந்தியதென,  
உந்தி ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும்  
வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும்,
10
முழை வாய் அரக்கர் பாடு கிடந்தொத்த  
நிறை கிடைப் பொற்றை வரை கடந்து இறந்தால்--  
எரி தழற் குஞ்சி, பொறி விழி, பிறழ் எயிற்று,  
இருள் உடல் அந்தகன் மருள் கொள உதைத்த  
மூவாத் திருப் பதத்து ஒரு தனிப் பெருமான்,
15
எண்ணில் பெறாத அண்டப் பெருந் திரள்  
அடைவு ஈன்றளித்த பிறை நுதற் கன்னியொடும்  
அளவாக் கற்பம் அளி வைத்து நிலைஇய--  
பாசடை நெடுங் காடு காணிகொள் நீர்நாய்,  
வானவில் நிறத்த நெட்டுடல் வாளைப்
20
பேழ்வாய் ஒளிப்ப, வேட்டுவப்பெயர் அளி-  
இடை உறழ் நுசுப்பின் குரவை வாய்க் கடைசியர்  
களை கடுந் தொழில் விடுத்து, உழவு செறு மண்ட,  
பண்கால் உழவர் பகடு பிடர் பூண்ட  
முடப் புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்தி,
25
சூடு நிலை உயர்த்தும் கடுங் குலை ஏற,  
பைங் குவளை துய்க்கும் செங் கட் கவரி  
நாகொடு வெருண்டு கழைக் கரும்பு உழக்க,  
அமுத வாய் மொழிச்சியர் நச்சுவிழி போல  
நெடுங் குழை கிழிப்பக் கடுங் கயல் பாயும்
30
தண்ணம் பழனம் சூழ்ந்த--  
கண் இவர் கூடல் பெரு வளம் பதியே!  
உரை