28. அறியாள் போன்று நினைவு கேட்டல்
 
   
பற்றலர்த் தெறுதலும், உவந்தோர்ப் பரித்தலும்,  
வெஞ் சுடர், தண் மதி, எனப் புகழ் நிறீஇய  
நெட்டிலைக் குறும் புகர்க் குருதி வேலவ!  
(வேதியன் படைக்க, மாலவன் காக்கப்  
பெறாதது ஓர் திரு உருத் தான் பெரிது நிறுத்தி,
5
அமுது அயில் வாழ்க்கைத் தேவர்கோன் இழிச்சிய,  
மதமலை இரு-நான்கு பிடர் சுமந்து ஓங்கிச்  
செம் பொன் மணி குயிற்றிய சிகரக் கோயிலுள்,  
அமையாத் தண்ணளி உமையுடன் நிறைந்த  
ஆலவாய் உறைதரும் மூலக் கொழுஞ் சுடர்)
10
கருவி வானம் அடிக்கடி பொழியும்,  
கூடம் சூழ்ந்த நெடு முடிப் பொதியத்து--  
கண் நுழையாது காட்சிகொடு தோற்றிய  
வெறி வீச் சந்தின் நிரை இடை எறிந்து,  
மற்று அது வேலி கொள வளைத்து, வளர் ஏனல்
15
நெடுங் கால், குற்றுழி, இதணுழை காத்தும்;  
தேவர்கோமான் சிறை அரி புண்ணினுக்கு  
ஆற்றாது, பெரு முழை வாய் விட்டுக் கலுழ்ந்தென,  
கமஞ் சூற் கொண்மூ, முதுகு குடியிருந்து,  
வான் உட்க முரற்றும் மலைச் சுனை குடைந்தும்;
20
பிரசமும், வண்டும், இரவி தெறு மணியும்,  
வயிரமும், பொன்னும், நிரைநிரை கொழித்து,  
துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும்;  
மறு அறு செம்மணி கால் கவண் நிறுத்தி,  
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும்;
25
எதிர் சொல் கேட்பக் கால் புகத் திகைத்த  
நெருக்கு பொழில் புக்கு, நெடு மலை கூயும்;  
நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்றப்  
பைங் காடு நகைத்த வெண் மலர் கொய்தும்;  
மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம்
30
செம் பொன் செய்த வரிப் பந்து துரந்தும்;  
இனைய, பல் நெறிப் பண்ணை இயங்கும்  
அளவாக் கன்னியர்-அவருள்,  
உளம் ஆம் வேட்கையள் 'இன்னள்' என்று உரையே.
உரை