3. பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்
|
|
|
|
பகையுடன்
கிடந்த நிலை பிரி வழக்கினைப் |
|
பொருத்தலும்,
பிரித்தலும், பொருபகை காட்டலும், |
|
உட்பகை
அமைத்தலும், உணர்த்து சொல் பொருத்தலும், |
|
ஒரு
தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும், |
|
செய்யா
அமைச்சுடன் சேரா அரசன் |
5
|
நாடு
கரிந்தன்ன காடு கடந்து இயங்கி-- |
|
இடும்பை
நிரப்பினர்க்கு ஈதலின்--இறந்தோர்க்கு, |
|
இதழ்
நிறை மதுவம் தாமரை துளித்தென, |
|
விழி
சொரி நீருடன் பழங்கண் கொண்டால், |
|
(உலகு
இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க, |
10
|
மாறனும்
புலவரும் மயங்குறு காலை, |
|
முந்துறும்
பெரு மறை முளைத்தருள் வாக்கால், |
|
'அன்பின்
ஐந்திணை' என்று அறுபது சூத்திரம், |
|
கடல்
அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல், |
|
பரப்பின்
தமிழ்ச் சுவை திரட்டி, மற்று அவர்க்குத் |
15
|
தெளிதரக்
கொடுத்த தென் தமிழ்க் கடவுள், |
|
தழற்கண்
தரக்கின் சரும ஆடையன் |
|
கூடல்
அம் பெரும் பதி கூறார் கிளை என) |
|
'நிறை
நீர்க் கயத்துள் ஒரு தாள் நின்று, |
|
தாமரை,
தவம் செய்து, அளியுடன் பெற்ற |
20
|
திருமகட்கு
அடுத்தது என்?' என்று, |
|
ஒருமை
காண்குவர்--துகிர்க் கிளைக் கொடியே! |
|