30. இன்னல் எய்தல்  
 
வள் உறை கழித்துத் துளக்கு வேல்-மகனும்,  
மனவு மயிற்கழுத்து மாலையாட்டியும்,  
நெல் பிடித்து உரைக்கும் குறியினோளும்,  
நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும்,  
அயரும் வெறியில் தண்டா அரு நோய்,
5
ஈயாது உண்ணுநர் நெடும் பழி போலப்  
போகாக் காலை புணர்க்குவது என்னோ?  
(நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப் பொலி வரைப்பகை  
அறுகால் குளிக்கும் மதுத் தொடை ஏந்த,  
முள்-தாட் செம்மலர் நான்முகத்து ஒருவன்
10
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்ப,  
புவி அளந்து உண்ட திரு நெடு மாலோன்  
இரு கரம் அடுக்கிப் பெரு நீர் வார்ப்ப  
ஒற்றை-ஆழியன், முயல் உடல் தண்சுடர்,  
அண்டம் விளர்ப்பப் பெரு விளக்கு எடுப்ப,
15
அளவாப் புலன் கொள, விஞ்சையர் எண்மரும்,  
வள்ளையில் கருவியில் பெரும் புகழ் விளைப்ப,  
முனிவர் செங் கரம் சென்னி ஆக,  
உருப்பசி முதலோர் முன் வாழ்த்து எடுப்ப,  
மும் முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட)
20
கூடற்கு இறைவன் இரு தாள் இருத்தும்  
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க,  
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்  
பீரமும் நோயும் மாறில்,  
வாரித் துறைவற்கு என் ஆதும்மே?
25
உரை