33.
உலகின்மேல் வைத்து உரைத்தல் |
|
|
|
இருளொடு
தாரகை இரண்டினை மயக்கி, |
|
குழல்
என, மலர் என, மயல்வரச் சுமந்து; |
|
வில்லினைக்
குனித்து, கணையினை வாங்கி, |
|
புருவம்,
கண் என, உயிர் விடப் பயிற்றி; |
|
மலையினைத்
தாங்கி, அமுதினைக் கடைந்து, |
5
|
முலை என,
சொல் என, அவா வர வைத்து; |
|
மெய்யினைப்
பரப்பி, பொய்யினைக் காட்டி, |
|
அல்குல்,
இடை என, நெஞ்சு உழலக் கொடுத்து; |
|
முண்டகம்
மலர்த்தி, மாந் தளிர் மூடி, |
|
அடி என,
உடல் என, அலமரல் உறீஇ- |
10
|
(மூரி
வீழ்ந்த நெறிச் சடை முனிவர், |
|
சருக்கம்
காட்டும் அரு மறை சொல்லி, |
|
உள்ளம்
கறுத்து, கண் சிவந்து, இட்ட |
|
மந்திரத்து,
அழல் குழி தொடு வயிறு வருந்தி, |
|
முன்பின்
ஈன்ற, பேழ்வாய்ப் புலியினை, |
15
|
கைதை
முள் செறித்த கூர்எயிற்று அரவினை, |
|
கார்
உடல் பெற்ற தீ விழிக் குறளினை-- |
|
உரி செய்து
உடுத்து, செங்கரம் தரித்து, |
|
செம்மலர்
பழித்த தாட் கீழ்க் கிடத்தி, |
|
திருநடம்
புரிந்த தெய்வ நாயகன், |
20
|
ஒரு நாள்,
மூன்று புரம் தீக் கொளுவ, |
|
பொன்மலை
பிடுங்கி, கார்முகம் என்ன |
|
வளைத்த
ஞான்று, நெடு விண் தடையக் |
|
கால்
கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து, |
|
நெருக்கு
பொழில் கூடல் அன்ன) செம் மகளிர் |
25
|
கண் எனும்
தெய்வக் காட்சியுள் பட்டோர், |
|
வெண்பொடி,
எருக்கம், என்பு, பனை, கிழியினை, |
|
பூசி,
அணிந்து, பூண்டு, பரி கடவி, |
|
கரத்தது
ஆக்கி, அந் நோ |
|
அருத்தி
மீட்பர்--நிலை வல்லோரே. |
30
|