35. நலம் புனைந்து உரைத்தல்  
 
அருள் தரும் கேள்வி அமையத் தேக்க,  
பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல்,  
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர்  
கொழுதிப் பாடும் குணச் சுரும்பினங்காள்!  
உளத்து வேறு அடக்கி, முகமன் கூறாது,
5
வேட்கையின் நீயிர் வீழ் நாள்-பூவினத்துள்--  
கார் உடல் பிறை எயிற்று அரக்கனைக் கொன்று  
வச்சிரத் தடக்கை வரைப் பகை சுமந்த  
பழ உடல் காட்டும் தீராப் பெரும் பழி,  
பனி மலை பயந்த மாதுடன், தீர்த்தருள்
10
பெம்மான் வாழும் பெரு நகர்க் கூடல்  
ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்--  
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு,  
நானம் நீவி, நாள்மலர் மிலைந்து,  
கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல்
15
நீடிச் செறிந்து, நெய்த்து உடல் குளிர்ந்த  
கருங் குழற் பெரு மணம் போல  
ஒருங்கும் உண்டோ? பேசுவிர் எமக்கே!  
உரை