36.
நாண் இழந்து வருந்தல் |
|
|
|
மை
குழைத்தன்ன தொள்ளிஅம் செறுவில், |
|
கூர்வாய்ப்
பறை தபு பெருங் கிழ நாரை, |
|
வஞ்சனை
தூங்கி, ஆரல் உண்ணும் |
|
நீங்காப்
பழனப் பெரு நகர்க் கூடல், |
|
கரம்
மான் தரித்த பெருமான் இறைவன் |
5
|
பொன்
பழித்து எடுத்த இன்புறு திருவடி |
|
உளம்
விழுங்காத களவினர் போல, என் |
|
உயிரொடும்
வளர்ந்த பெரு நாண்-தறியினை, |
|
வெற்பன்
காதற்கால் உலை வேலையின்-- |
|
வலி
உடைக் கற்பின் நெடு வளி சுழற்றிக் |
10
|
கட்புலன்
காணாது, காட்டை கெட உந்தலின்; |
|
என்போல்,
இந் நிலை, ஆறுவரப் படைக்கும் |
|
பேறு,
ஆங்கு ஒழிக: பெரு நாண் கற்பினர் |
|
என்
பேறு உடையர் ஆயின், |
|
கற்பில்
தோன்றாக் கடன் ஆகுகவே. |
15
|