38.
பொழுது கண்டு மயங்கல் |
|
|
|
கோடிய
கோலினன் செருமுகம் போல, |
|
கனைகதிர்
திருகிக் கல் சேர்ந்து முறை புக; |
|
பதினெண்
கிளவி ஊர் துஞ்சியபோல், |
|
புட்
குலம் பொய்கைவாய் தாழ்க்கொள்ள; |
|
வேள்
சரத்து உடைகுநர் கோலம் நோக்கி, |
5
|
இருள்மகள்
கொண்ட குறுநகை போல, |
|
முல்லையும்
மௌவலும், முருகு உயிர்த்து, அவிழ; |
|
தணந்தோர்
உளத்தில் காமத்தீப் புக; |
|
மணந்தோர்
நெஞ்சத்து அமுத நீர் விட; |
|
அன்றில்
புற் சேக்கை புக்கு, அலகு பெடை அணைய; |
10
|
அந்தணர்
அருமறை அருங்கிடை அடங்க; |
|
முது
கனி, மூலம், முனிக்கணம் மறுப்ப; |
|
கலவையும்,
பூவும், தோள், முடி, கமழ; |
|
விரிவலை
நுளையர் நெய்தல் ஏந்தி, |
|
துத்தம்,
கைக்கிளை, அளவையின் விளைப்ப; |
15
|
நீரரமகளிர்
செவ் வாய் காட்டிப் |
|
பசுந்
தாட் சேக் கொள் ஆம்பல் மலர, |
|
(தோளும்
இசையும், கூறிடும் கலையும், |
|
அருள்-திரு
எழுத்தும், பொருள்-திரு மறையும், |
|
விரும்பிய
குணமும், அருந் திரு உருவும், |
20
|
முதல்
என் கிளவியும், விதமுடன் நிரையே-- |
|
எட்டும்,
ஏழும், சொற்றன ஆறும், |
|
ஐந்தும்,
நான்கும், அணிதரு மூன்றும் |
|
துஞ்சல்
இல் இரண்டும், சொல் அரும் ஒன்றும்-- |
|
ஆர்
உயிர் வாழ அருள் வர நிறுத்திய, |
25
|
பேர்
அருட் கூடல் பெரும்பதி நிறைந்த) |
|
முக்கட்
கடவுள் முதல்வனை வணங்கார் |
|
தொக்க
தீப் பெரு வினை சூழ்ந்தன போலவும்; |
|
துறவால்,
அறனால், பெறல் இல் மாந்தர் |
|
விள்ளா
அறிவும் உள்ளமும் என்னவும்; |
30
|
செக்கர்த்
தீயொடு புக்க நல் மாலை! |
|
என்
உயிர் வளைந்த தோற்றம் போல, |
|
நாற்
படை வேந்தன் பாசறை- |
|
யோர்க்கும்
உளையோ" மனத் திறன் ஓதுகவே. |
|