40.
விரதியரைவினாவல் |
|
|
|
நிலவு
பகல் கான்ற புண்ணிய அருட்பொடி |
|
இரு
வினை துரந்த திருவுடல் மூழ்கி, |
|
நடு
உடல் வரிந்த கொடிக்காய்ப் பத்தர், |
|
சுத்தி
அமர் நீறுடன், தோள்வலன் பூண்டு, |
|
முடங்கு
வீழ் அன்ன வேணி முடி கட்டி, |
5
|
இரு
மூன்று குற்றம் அடியறக் காய்ந்து, இவ் |
|
ஆறு
எதிர்ப்பட்ட அருந் தவத் திருவினிர்! |
|
"தணியாக்
கொடுஞ் சுரம் தரும் தழல் தாவிப் |
|
பொன்-உடல்
தேவர் ஒக்கலொடு மயங்கி, |
|
கொண்மூப்
பல் திரைப் புனலுடன் தாழ்த்தி, |
10
|
பொதுளிய
தருவினுள் புகுந்து, இமையாது, |
|
மருந்து
பகுத்து உண்டு, வல் உயிர் தாங்கும் |
|
வட்டை
வந்தனை!" என, வழங்கு மொழி நிற்க: |
|
"தாய்
கால் தாழ்ந்தனள்; ஆயம் வினவினள்; |
|
பாங்கியைப்
புல்லினள்; அயலும் சொற்றனள்; |
15
|
மக்கட்
பறவை பரிந்து உளம் மாழ்கினள்; |
|
பாடலப்
புதுத் தார்க் காளையின் ஒன்றால் |
|
தள்ளா
விதியின் செல்குநள்" என்று-- |
|
தழல்விழிப்
பேழ்வாய்த் தரக்கின் துளி முலை, |
|
பைங்
கண் புல்வாய், பால் உணக் கண்ட |
20
|
அருள்
நிறை பெருமான், இருள் நிறை மிடற்றோன், |
|
மங்குல்
நிரை பூத்த மணி உடுக் கணம் எனப் |
|
புன்னைஅம்
பொதும்பர்ப் பூ நிறை கூடல், நும் |
|
பொன்
அடி வருந்தியும் கூடி-- |
|
அன்னையர்க்கு
உதவல் வேண்டும் இக் குறியே. |
25
|