42. வன்புறை எதிரழிந்து இரங்கல்
 
   
ஈன்ற செஞ் சூழல், கவர்வழி பிழைத்த  
வெறிவிழிப் பிணர் மருப்பு ஆமான் கன்றினை,  
மென் நடைக் குழைசெவி பெறா, வெறுங் கரும் பிடி,  
கணிப் பணைக் கவட்டும், மணற் சுனைப் புறத்தும்,  
தழைக் குற மங்கையர் ஐவனம் அவைக்கும்
5
உரற்குழி நிரைத்த கல் அறைப் பரப்பும்,  
மானிட மாக்கள் அரக்கி கைப்பட்டென,  
நாச் சுவை அடுக்கும் உணவு உவவாது  
வைத்துவைத்து எடுக்கும் சாரல் நாடன்  
அறிவும், பொறையும், பொருள் அறி கல்வியும்,
10
ஒழுக்கமும், குலனும், அழுக்கு அறு தவமும்,  
இனிமையும், பண்பும், ஈண்டவும் நன்றே!--  
வெடிவால் பைங் கண் குறு நரியினத்தினை,  
ஏழ் இடம் தோன்றி, இனன் நூற்கு இயைந்து,  
வீதி போகிய வால் உளைப் புரவி
15
ஆக்கிய விஞ்சைப் பிறை முடி அந்தணன்,  
(கொண்டோற்கு ஏகும் குறியுடை நல் நாள்,  
அன்னையர் இல்லத்து, அணி மட மங்கையர்  
கண்டன கவரும் காட்சி போல,  
வேலன் பேசி, மறி செகுத்து, ஓம்பிய,
20
காலம் கோடா வரை வளர் பண்டம்  
வருவன வாரி; வண்டினம் தொடர,  
கண் கயல் விழித்து; பூத்துகில் மூடி;  
குறத்தியர், குடத்தியர்; வழி விட நடந்து;  
கருங்கால் மள்ளர், உழவச் சேடியர்,
25
நிரை நிரை வணங்கி மதகு எதிர்கொள்ள;  
தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும்  
வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த)  
கூடல் பெருமான், பொன் பிறழ் திருவடி  
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல,
30
சலியாச் சார்பு நிலை அற நீங்கி,  
அரந்தை யுற்று, நீடநின்று இரங்கும்--  
முருந்து எயிற்று, இளம் பிறைக் கோலம்  
திருந்திய திரு நுதல் துகிர் இளங்கோடியே.
உரை