43. அன்னமோடு அழிதல்
 
   
கவைத் துகிர், வடவையின், திரள் சிகை பரப்பி,  
அரை பெறப் பிணித்த கல் குளி மாக்கள்  
உள்ளம் தீக்கும் உவர்க் கடல் உடுத்த  
நாவல்அம் தண் பொழில் இன்புடன் துயில;  
உலகு அற விழுங்கிய நள்ளென் கங்குல்,
5
துயிலாக் கேளுடன், உயிர் இரை தேரும்  
நெட்டுடல் பேழ்வாய்க் கழுதும் உறங்க;  
பிள்ளையும் பெடையும் பறைவாய்த் தழீஇச்  
சுற்றமும் சூழக் குருகு கண்படுப்ப;  
கீழ் அரும்பு அணைத்த முள் அரை முளரி
10
இதழ்க் கதவு அடைத்து மலர்க்கண் துயில;  
விரிசினை பொதுளிய பாசிலை ஒடுக்கி,  
பூவொடும், வண்டொடும், பொங்கரும், உறங்க--  
(பால் முகக் களவின் குறுங் காய்ப் பச்சிணர்,  
புட்கால்-பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த,
15
மயிர் குறை கருவித் துணைக் குழை அலைப்ப;  
வரிந்த இந்தனச் சுமை, மதி, அரவு, இதழி,  
அகன்று கட்டு அவிழ்ந்த சேகரத்து, இருத்தி;  
வீதியும், கவலையும், மிக வளம் புகன்று;  
பொழுது கண் மறைந்த தீவாய்ச் செக்கர்
20
தணந்தோர் உள்ளத்துள் உறப் புகுந்த பின்,  
கார் உடல் காட்டி, கண்ட கண் புதைய,  
அல் எனும் மங்கை மெல்லெனப் பார்க்க,  
முரன்று எழு கானம் முயன்று, வாது இயைந்த  
வட புல விஞ்சையன் வைகு இடத்து அகன் கடை,
25
"தென் திசைப் பாணன் அடிமை யான்" என,  
போகா விறகுடன் தலைக் கடை பொருந்தி;  
உந்தித் தோற்றம் ஓசை நின்று ஒடுங்க,  
பாலையில் எழுப்பி, அமர் இசை பயிற்றி,  
தூங்கலும் துள்ளலும், சுண்டி நின்று எழுதலும்,
30
தாரியில் காட்டித் தரும் சாதாரி,  
உலகு உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க,  
இசை விதி பாடி, இசைப்பகை துரந்த  
கூடற்கு இறையோன் தாள் விடுத்தோர் என)  
என் கண் துஞ்சா நீர்மை
35
முன் கண்டு ஓதாது அவர்க்கு, இளங் குருகே.
உரை