44. சொல்லாது ஏகல்  
   
இலது எனின், உளது என்று, உள்ளமொடு விதித்தும்  
சொல்லா நிலை பெறும்; சூளுறின், மயங்கிச்  
செய் குறிக் குணனும் சிந்தையுள் திரிவும்;  
உழை நின்று அறிந்து, பழங்கண் கவர்ந்தும்;  
கண் எதிர் வைகி, முகன் கொளின் கலங்கியும்:
5
வழங்குறு கிளவியின், 'திசை' என, மாழ்கியும்;  
ஒரு திசை நோக்கினும், இருக்கினும், உடைந்தும்;  
'போக்கு' என உழையர், அயர்ப்பிடைக் கிளப்பினும்,  
முலைக் குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம்  
செம்மணி கரிந்து தீத்தர, உயிர்த்தும்;
10
'போம்' என வாய்ச் சொல் கேட்பினும், புகைந்தும்;  
கொள்ளார் அறுதியும், கொண்டோர் இசைத்தலும்,  
ஈது எனக் காட்டிய மயல் மடவரற்கு--  
(முன், ஒரு வணிகன், மகப் பேறு இன்மையின்,  
மருமான்தன்னை மகவு எனச் சடங்கு செய்து,
15
உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி,  
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி,  
அப் புலத்து உயிர் கொடுத்து, அருட்பொருள் கொண்டபின்;  
மற்று அவன் தாயம் வவ்வுறு மாக்கள்,  
காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை,
20
நிரைத்துக் கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும்,  
மைந்தனும், கேளிரும், 'மதி முடிக் கடவுள்! நின்  
புந்தி ஒன்று இன்றிப் புகல் இலம்' என்று அயர்  
அவ்வுழி; ஒரு சார், அவன் மாதுலன் என,  
அறிவு-ஒளி நிறைவே ஓர் உருத் தரித்து வந்து,
25
அருள் வழக்கு ஏறி, அவர் வழக்கு உடைத்த  
கூடல் நாயகன் தாள் பணியார் என)  
எவ்வழிக் கிளவியின் கூறிச்  
செவ்விதின் செல்லும் திறன், இனி யானே?  
உரை