45. தெளிதல்  
 
நின்று அறி கல்வி ஒன்றிய மாந்தர்  
புனை பெருங் கவியுள் தருபொருள் என்ன  
ஓங்கி, புடை பரந்து, அமுதம் உள் ஊறி,  
காண் குறி பெருத்து, கச்சு-அவை கடிந்தே,  
எழுத்து, மணி, பொன், பூ, மலை, என யாப்புற்று
5
அணி பெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின;  
செங்கோல் அரசன் முறைத் தொழில் போல,  
அமுதமும், கடுவும், வாளும், படைத்த  
மதர் விழித் தாமரை மலர்ந்து, இமைத்து, அமர்த்தன;  
செய் குறை முடிப்பவர் சென்மம் போலப்
10
பதமலர் மண்மிசைப் பற்றிப் பரந்தன;  
அமுதம் பொடித்த முழுமதி என்ன  
முகம் வியர்ப்பு உறுத்தின; உள்ளமும் சுழன்றன--  
(இதழியும், தும்பையும், மதியமும், கரந்து  
வளை விலை மாக்கள் வடிவு எடுத்தருளி,
15
முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்  
வீதி கூறி, விதித்த முன் வரத்தால்--  
கரு முகில் விளர்ப்ப, அறல் நீர் குளிப்ப,  
கண் புகை யாப்புத் திணி இருள் விடிய,  
உடல்தொறும் பிணித்த பாவமும் புலர,
20
கண்ட நீள் கதுப்பினர் கை குவி பிடித்து--  
குருகு அணி செறித்த தனி முதல் நாயகன்,  
குருகும் அன்னமும் வால் வளைக் குப்பையை.
'அண்டமும் பார்ப்பும் ஆம்' என அணைக்கும்,  
அலை நீர்ப் பழன முது நகர்க்) கூடல்
25
ஒப்புடைத்து ஆய இப் பொற்றொடி மடந்தை,  
'அணங்கினள் ஆம்' என நினையல்,  
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே!  
உரை