46. பருவம் கண்டு பெருமகள் புலம்பல்
 
 
பசி மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற,  
ஆசையின் செறிந்த பொங்கர்க் குலத்தாய்  
அருப்புமுலைக் கண் திறந்து உமிழ் மதுப் பால்,  
சினை மலர்த் துணைக் கரத்து அன்புடன் அணைத்து,  
தேக்கிட அருத்தி, அலர்மலர்த் தொட்டில்
5
காப்புறத் துயிற்றும் கடி நகர்க் கூடல்  
அருளுடன் நிறைந்த கரு உயிர் நாயகன்  
(குரவு அரும்பு உடுத்த வால் எயிற்று அழல்விழிப்  
பகுவாய்ப் பாம்பு முடங்கல் ஆக,  
ஆலவாய் பொதிந்த மதிமுடித் தனி முதல்)
10
சேக்கொள் முளரி அலர்த்திய திருவடி  
கண் பருகாத களவினர் உளம் போல்,  
காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில்  
எம் உயிர் அன்றி இடை கண்டோர்க்கும்  
நெஞ்சு அறை பெருந் துயர் ஓவாது உடற்றக்
15
கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்  
கண்ணினும் கவரும் கொல்லோ--  
உள் நிறைந்து இருந்து வாழிய மனனே?  
உரை