47. முகிலொடு கூறல்
|
|
|
|
கருங்
குழற் செவ் வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு |
|
உளத்துயர்
ஈந்து, கண் துயில் வாங்கிய |
|
ஆனா
இன்னல் அழிபடக் காண்பான், |
|
(விரிபொரி
சிந்தி, மண மலர் பரப்பி, |
|
தெய்வக்
குலப் புகை விண்ணொடும் விம்ம, |
5
|
இரு-நால்
திசையும், உண்பலி தூவி, |
|
நல்
நூல் மாக்கள் நணிக் குறி சொற்று, |
|
பக்கம்
சூழ்ந்த நெடு நகர் முன்றில் |
|
கோடு
அகழ்ந்து எடுத்த மறி நீர்க் காலும், |
|
வெங்கார்
பெய்து நாள் குறித்து உழுநரும், |
10
|
சூல்
நிறைந்து உளையும் சுரி வளைச் சாத்தும், |
|
இனக்
கயல் உண்ணும் களிக் குருகினமும், |
|
வரைப்
பறை அரிந்த வாசவன்-தொழுது |
|
நிரைநிரை
விளம்பி வழி முடி நடுநரும், |
|
நாறு
கழி துற்ற சகடு ஈர்க்குநரும், |
15
|
தாமரை
பாடும் அறுகால்-கிளையும், |
|
உறைத்து
எழு கம்பலை உம்பரைத் தாவி |
|
முடித்தலை
திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும் |
|
அள்ளற்
பழனத்து அணிநகர்க்) கூடல் |
|
நீங்காது
உறையும் நிமிர்சடைப் பெருமான்-- |
20
|
உரகன்
வாய் கீண்ட மாதவன் போல |
|
மண்
அகழ்ந்து எடுத்து வருபுனல் வையைக் |
|
கூலம்
சுமக்கக் கொற்றாள் ஆகி, |
|
நரைத்
தலை முதியோள் இடித்து அடு கூலி கொண்டு |
|
அடைப்பது
போல, உடைப்பது நோக்கி, |
25
|
கோமகன்
அடிக்க, அவன் அடி வாங்கி, |
|
எவ்
உயிர், எவ் உலகு, எத் துறைக்கு எல்லாம், |
|
அவ்
அடி கொடுத்த அருள் நிறை நாயகன்-- |
|
திரு
மிடற்று இருள் எனச் செறி தரும் மா முகில்! |
|
எனது
கண் கடந்து நீங்கித் |
30
|
துனைவுடன்
செல்லல், ஒருங்குபு புரிந்தே. |
|