48.
தழை விருப்பு உரைத்தல்
|
|
|
|
அறுகும்
தும்பையும் அணிந்த செஞ் சடையும், |
|
கலைமான்,
கணிச்சியும், கட்டிய அரவமும், |
|
பிறிதும்
கரந்து, ஒரு கானவன் ஆகி, |
|
அருச்சுனன்
அருந் தவம் அழித்து அமர் செய்து, அவன் |
|
கொடுமரத்
தழும்பு திருமுடிக்கு அணிந்து, |
5
|
பொன்னுடை
ஆவம் தொலையாது சுரக்கப் |
|
பாசுபதக்
கணை பரிந்து அருள் செய்தோன்-- |
|
வாசவன்
மகட் புணர்ந்து, மூன்று எரி வாழ, |
|
தென்
கடல் நடுத் திடர் செய்து உறைந்து இமையவர் |
|
ஊர்
உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த |
10
|
மணி
வேற் குமரன் களிமகிழ் செய்த |
|
பேர்
அருட் குன்றம் ஒரு பால் பொலிந்த |
|
அறப்
பெருங்கூடல் பிறைச் சடைப் பெருமான்-- |
|
திருவடிப்
பெருந்தேன் பருகுநர் போல, |
|
மணமுடன்
பொதுளிய வாடா மலர்த் தழை |
15
|
ஒரு
நீ விடுத்தனை; யான் அது கொடுத்தனன்; |
|
அவ்வழிக்
கூறின்; அத் தழை வந்து |
|
கண்
மலர் கவர்ந்தும், கைமலர் குவித்தும், |
|
நெட்டுயிர்ப்பு
எறிந்தும் முலைமுகம் நெருக்கியும், |
|
ஊடியும்,
வணங்கியும், உவந்து அளி கூறியும், |
20
|
பொறை
அழி காட்சியள் ஆகி |
|
நிறை
அழிந்தவட்கு நீ ஆயினவே! |
|