5.
இளமை கூறி மறுத்தல்
|
|
|
|
இரண்டு
உடல் ஒன்றாய்க் கரைந்து, கண் படாமல், |
|
அளவு
இயல் மண நிலை பரப்பும் காலம் |
|
தளை
கரை கடந்த காமக்கடலுள் |
|
புல்
நுனிப் பனி என மன்னுதல் இன்றி, |
|
பீரம்
மலர்ந்த வயாவு நோய் நிலையாது, |
5
|
வளை
காய் விட்ட புளி அருந்தாது, |
|
செவ்
வாய் திரிந்து வெள் வாய் பயவாது, |
|
மனை
புகையுண்ட கரு மண் இடந்து |
|
பவள
வாயில் சுவை காணாது, |
|
பொற்குட
முகட்டுக் கரு மணி அமைத்தெனக் |
10
|
குங்குமக்
கொங்கையும் தலைக்கண் கறாது, |
|
மலர
அவிழ்ந்த தாமரைக் கயல் என |
|
வரி
கொடு மதர்த்த கண் குழியாது, |
|
குறி
படு திங்கள் ஒருபதும் புகாது, |
|
பொன்
பெயர் உடையோன் தன் பெயர் கெடுப்ப, |
15
|
தூணம்
பயந்த மாண் அமர் குழவிக்கு, |
|
அரக்கர்
கூட்டத்து அமர் விளையாட, |
|
நெருப்பு
உமிழ் ஆழி ஈந்தருள் நிமலன் |
|
(கூடல்
மாநகர், ஆட எடுத்த |
|
விரித்த
தாமரை குவித்த தாளோன்) |
20
|
பேர்
அருள் விளையாச் சீர்-இலர் போல, |
|
துலங்கிய
அமுதம் கலங்கிய தென்ன, |
|
இதழ்
குவித்துப் பணித்த குதலை தெரியாது; |
|
முருந்து
நிரைத்த திருந்து பல் தோன்றாது; |
|
தெய்வம்
கொள்ளார் திணி மனம் என்ன, |
25
|
விரிதரு
கூழையும் திரு முடி கூடாது; |
|
துணை
மீன் காட்சியின் விளை கரு என்ன, |
|
பார்வையின்
தொழில்கள் கூர்விழி கொள்ளாது; |
|
மறு
புலத்து இடுபகை வேந்து அடக்கியது என, |
|
வடுத்து
எழு கொலை முலை பொடித்தில அன்றே: |
30
|
செம்
மகள் மாலை இம் முறை என்றால், |
|
வழுத்தலும்
வருதலும் தவிர்தி-- |
|
மொழிக்
குறி கூடாச் செவ் வேலோயே! |
|