50. ஊடல் தணிவித்தல்
 
   
அவ்வுழிஅவ்வுழிப் பெய் உணவு உன்னி,  
முகன் பெறும் இரு செயல் அகன் பெறக் கொளுவும்  
புல்லப் பாண்மகன் சில்லையும் இன்றி;  
இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி;  
முடித்தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி;
5
பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும்  
பேழ்வாய்ப் புலி உகிர் சிறு குரல் விளங்க,  
அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டிப்  
பழம் கோள் தத்தை வழங்கு சொல் போலும்  
மழலைக் கிளவியும், இரு நிலத்து இன்பமும்,
10
ஒரு வழி அளிக்கும் இருங் கதிர்ச் சிறுவனை,  
தழல் விழி மடங்கல் கொலை அரிக் குருளையைப்  
பொன்மலை கண்ட பொலிவு போல,  
மணிகெழு மார்பத்து அணிபெறப் புகுதலின்;  
(கறங்கு இசை அருவி அறைந்து நிமிர் திவலையும்,
15
துருத்தி வாய் அதுக்கிய குங்குமக் காண்டமும்,  
குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும்,  
நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும்,  
புனம் பட எறிந்த கார் அகில் தூமமும்,  
அந்தணர் பெருக்கிய செந் தீப் புகையும்,
20
வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்,  
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும்,  
சந்தனப் பொங்கர்த் தழைச் சிறை மயிலும்,  
முன்றில் அம் பெண்ணைக் குடம்பை கொள் அன்றிலும்,  
ஒன்றினொடு ஒன்று சென்று தலை மயங்கும்
25
குளவன் குன்றக் கூடல் அம் பதி நிறை,  
மஞ்சு அடை குழல் பெறு செஞ் சடைப் பெருமான்--  
அருந் தமிழ்க் கீரன் பெருந் தமிழ்ப் பனுவல்  
வாவியில் கேட்ட காவிஅம் களத்தினன்--  
திருக்கண் கண்ட பெருக்கினர்போல)
30
முளரிஅம் கோயில் தளைவிட வந்து,  
நல்லறம் பூத்த முல்லைஅம் திருவினள்!  
நின் உளத்து இன்னல் மன் அறக் களைந்து,  
பொருத்தம் காண்டி--வண்டு ஆரும்  
அருத்தி அம் கோதை மன்னவன் பாலே.
35
உரை