54. புனல் ஆட்டுவித்தமை
கூறிப் புலத்தல்
|
|
|
|
கொன்றைஅம்
துணரில் செவ்வழி குறித்து, |
|
வால்
உளை எருக்கில் வளர் உழை பாடி, |
|
கூவிளங்கண்ணியில்
குலக் கிளை முரற்றி, |
|
வெண்
கூதளத்தில் விளரி நின்று இசைத்து, |
|
வண்டும்,
தேனும், ஞிமிறும், சுரும்பும், |
5
|
உமிழ்நறவு
அருந்தி உறங்கு செஞ் சடையோன்; |
|
மது
மலர் மறித்துத் திருவடி நிறைத்த |
|
நான்மறைப்
பாலனை நலிந்து உயிர் கவரும் |
|
காலற்
காய்ந்த காலினன்; கூடல் |
|
திரு
மறுகு அணைந்து வரு புனல் வையை |
10
|
வரை
புரண்டென்னத் திரை நிரை துறையகத்து, |
|
அணந்து
எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள் |
|
மதிநுதல்
பெருமதி மலர்முகத்து ஒருத்தியை-- |
|
ஆட்டியும்
அணைத்தும், கூட்டியும் குலவியும், |
|
ஏந்தியும்
எடுத்தும், ஒழுக்கியும் ஈர்த்தும், |
15
|
முழுக்கியும்
தபுத்தியும், முலை-ஒளி நோக்கியும், |
|
விளி
மொழி ஏற்றும், விதலையின் திளைத்தும், |
|
பூசியும்
புனைந்தும், பூட்டியும் சூட்டியும், |
|
நிறுத்தியும்
நிரைத்தும், நெறித்தும் செறித்தும், |
|
எழுதியும்
தப்பியும், இயைத்தும் பிணித்தும், |
20
|
கட்டியும்
கலத்தியும், கமழ்த்தியும் மறைத்தும்-- |
|
செய்தன
எல்லாம் செய்யலர் போல, என் |
|
நெட்டிலை
பொலிந்த பொன் நிறை திரு உறையுளில்-- |
|
பாசடைக்
குவளைக் சுழல் மணக் காட்டினைக் |
|
கரு
வரிச் செங் கண் வராலினம் கலக்க, |
25
|
வேரி
மலர் முண்டகத்து அடவி திக்கு எறிய |
|
வெள்
உடற் கருங் கட் கயல் நிரை உகைப்ப, |
|
மரகதப்
பன்னத்து ஆம்பல்அம் குப்பையைச் |
|
சொரி
எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப, |
|
படிந்து
சேடு எறியும் செங் கட் கவரியும், |
30
|
மலை
சூழ் கிடந்த பெருங் குலைப் பரப்பும், |
|
மலையுடன்
அலைந்த முதுநீர் வெள்ளமும், |
|
மிடைந்து,
வயல் இரிந்து முதுகு சரிந்து உடைந்து |
|
சிறியோன்
செரு என முறிய, போகி, |
|
உழவக்கணத்தைக்
குலைக் குடில் புகுத்தும்-- |
35
|
பெரு
நீர் ஊரர், நிறைநீர் விடுத்துச் |
|
செறிந்தது
என்? எனக் கேண்மின், |
|
மறிந்துழை
விழித்த மறி நோக்கினரே! |
|