55. தன்னை வியந்து உரைத்தல்
|
|
|
|
விடம்
கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய்க் |
|
கண்டல்
முள் முளைத்த கடி எயிற்று அரவக் |
|
குழுவினுக்கு
உடைந்து குளிர் மதி ஒதுங்க, |
|
தெய்வப்
பிறை இருந்த திரு நுதற் பேதையைக் |
|
கண்டு
உகண்டு அரவம் மயில் எனக் கலங்க, |
5
|
நெடுஞ்
சடைக் காட்டினை அடும் தீக்கொழுந்து என, |
|
'தலை
ஏது' அலையா நகு தலை தயங்க, |
|
அணி
தலைமாலையை நிறைமதித் திரள் எனப் |
|
புடைபுடை
ஒதுங்கி அரவு வாய் பிளப்ப, |
|
ஒன்றினுக்கு
ஒன்று கன்றிய நடுக்கொடு |
10
|
கிடந்து
ஒளி பிறழும் நெடுஞ் சடைப் பெருமான், |
|
(படை
நான்கு உடன்று, பஞ்சவன்-துரந்து, |
|
மதுரை
வவ்விய கருநட வேந்தன் |
|
அருகர்ச்
சார்ந்து நின்று அருட்பணி அடைப்ப, |
|
மற்று-அவன்தன்னை
நெடுந்துயில் வருத்தி; |
15
|
இறையவன்
குலத்து முறையர் இன்மையினால், |
|
கருதி,
தோரை கல்லொடு பிறங்க |
|
மெய்
அணி அளறாக் கைம் முழம் தேய்த்த |
|
பேர்
அன்பு உருவப் பசுக் காவலனை, |
|
உலகினில்,
தமது முக் குறி ஆக, |
20
|
மணி
முடி வேணியும், உருத்திரக் கலனும், |
|
நிலவு
உமிழ் புண்ணியப் பால் நிறச் சாந்தமும், |
|
அணிவித்து,
அருள் கொடுத்து, அரசன் ஆக்கி, |
|
அடுமால்
அகற்றி, நெடு நாள் புரக்க |
|
வையகம்
அளித்த மணி ஒளிக் கடவுள்) |
25
|
நெடு
மதிற் கூடல் விரிபுனல் வையையுள் |
|
பிடி
குளிசெய்யும் களிறு-அது போல, |
|
மயில்
எனும் சாயல் ஒரு மதி நுதலியை |
|
மருமமும்,
தோளினும், வரை அறப் புல்லி |
|
ஆட்டுறும்
ஊரன் அன்பு கொள் நலத்தினை, |
30
|
பொன்னுலகு
உண்டவர் மண் உலகு இன்பம் |
|
தலைநடுக்
குற்ற தன்மை போல, |
|
ஒன்று
அற அகற்றி உடன் கலந்திலனேல்-- |
|
அன்ன
ஊரனை எம் இல் கொடுத்து, |
|
தேரினும்,
காலினும், அடிக்கடி கண்டு, |
35
|
நெட்டுயிர்ப்பு
எறிந்து, நெடுங் கண் நீர் உகுத்துப் |
|
பின்னும்
தழுவ உன்னும் அவ் ஒருத்தி- |
|
அவளே
ஆகுவள், யானே--தவல் அருங் |
|
கரு
நீர்க் குண்டு அகழ் உடுத்த |
|
பெரு
நீர் ஆழித் தொல் உலகுழிக்கே. |
40
|