56.
புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல்
|
|
|
|
அடியவர்
உளத்து இருள் அகற்றலின் விளக்கும், |
|
எழு
மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும், |
|
கருங்
கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும், |
|
மா
உயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும், |
|
என்
உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும், |
5
|
நச்சின
கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும், |
|
கரு
வழி நீக்கலின் உயர் நிலைக் குருவும், |
|
இரு
நிலம் காத்தலின் மதியுடை வேந்தும், |
|
ஆகிய
மணி வேல் சேவல்அம் கொடியோன்-- |
|
வானக
மங்கையும், தேன் வரை வள்ளியும், |
10
|
இரு
புறம் தழைத்த திரு நிழல் இருக்கும்-- |
|
ஒரு
பரங்குன்றம் மருவிய கூடல், |
|
பெருநதிச்
சடைமிசைச் சிறுமதி சூடிய |
|
நாயகன்
திருவடி நண்ணலர் போல, |
|
பொய்
பல புகன்று, மெய் ஒளித்து, இன்பம் |
15
|
விற்று
உணும் சேரி விடாது உறை ஊரன், |
|
ஊருணி
ஒத்த பொது வாய்த் தம்பலம் |
|
நீயும்
குதட்டினை ஆயின்--சேயாய்! |
|
நரம்பு
எடுத்து உமிழும் பெரு முலைத் தீம் பாற்கு |
|
உள்ளமும்
தொடாது, விள் அமுது ஒழுக்கும் |
20
|
குதலைவாய்
துடிப்பக் குலக் கடை உணங்கியும், |
|
மண்
உறு மணி எனப் பூழி மெய் வாய்த்தும், |
|
புடை
மணி விரித்த உடைமணி இழுக்கியும், |
|
சுடிகையும்
சிகையும் சோர்ந்து கண் பனித்தும், |
|
பறையும்
தேரும் பறிபட்டு அணங்கியும், |
25
|
மறிக்கட்
பிணாவினர் இழைக்கும் சிற்றிலில் |
|
சென்று
அழியாது நின்று அயர் கண்டும், |
|
உறுவதும்
இப் பயன்: அன்றேல், |
|
பெறுவது
என் பால்; இன்று நின் பேறே. |
|