60.
முகம் கண்டு மகிழ்தல்
|
|
|
|
நிறைமதி
புரையா! நிறைமதி புரையா! |
|
'தேரான்
தெளிவு' எனும் திருக்குறள் புகுந்து |
|
குறைமதி
மனனே! நிறைமதி புரையா!-- |
|
உவர்க்
கடற் பிறந்தும், குறைஉடல் கோடியும், |
|
கருங்
கவைத் தீ நாப் பெரும் பொறிப் பகுவாய்த் |
5
|
தழல்விழிப்
பாந்தள்தான் இரை மாந்தியும், |
|
மிச்சில்
உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும், |
|
தணந்தோர்க்கு
எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும், |
|
குமுதம்
மலர்த்தியும் கமலம் குவித்தும், |
|
கடல்
சூழ் உலகில் மதி நடு இகந்தும்-- |
10
|
பெரு
மறை கூறி அறை விதிதோறும், |
|
'முத்
தழற்கு உடையோன் முக்கட் கடவுள்' என்று |
|
உய்த்திடும்
வழக்குக் கிடக்க என்று, ஒருகால், |
|
வானவர்
நதிக் கரை மருள் மகம் எடுத்த |
|
தீக்குணத்
தக்கன் செருக்களம்தன்னுள், |
15
|
(கண்தொறும்
விசைத்த கருப்புத் தரளமும், |
|
வளை
உமிழ் ஆரமும், சுரிமுகச் சங்கும், |
|
வலம்புரிக்
கூட்டமும், சலஞ்சலப் புஞ்சமும், |
|
நந்தின்
குழுவும், வயல்வயல் நந்தி |
|
உழவக்
கணத்தர் படைவாள் நிறுத்தும்) |
20
|
கூடற்கு
இறையோன் குரை கழற்படையால் |
|
ஈர்-எண்
கலையும் பூழிபட்டு உதிர |
|
நிலனொடு
தேய்ப்புண்டு அலமந்து உலறியும், |
|
சிதைந்து
நைந்து எழு பழித் தீ மதி புரையா!-- |
|
முண்டகம்
மலர்த்தி முதிராது அலர்ந்தும், |
25
|
தீக்
கதிர் உடலுள் செல்லாதிருந்தும், |
|
திளையாத்
தாரைகள் சேரா |
|
முளையா
வென்றி இவள் முகமதிக்கே! |
|