61. கற்புப் பயப்பு உரைத்தல்
 
   
எழு கடல் வளைந்த பெருங்கடல் நாப்பண்  
பத்துடை நூறு பொற்பு அமர் பரப்பும்  
ஆயிரத்து இரட்டிக் கீழ் மேல் நிலையும்  
யோசனை உடுத்த, மாசு அறு காட்சிப்  
பளிக்குப் பொருப்பில், திடர் கொள் மூதூர்க்
5
களவுடை வாழ்க்கை உள மனக் கொடியோன்  
படர் மலை ஏழும், குருகு அமர் பொருப்பும்,  
மா எனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும்,  
கடுங் கனல் பூழிபடும்படி நோக்கிய  
தாரை எட்டு உறையும் கூர் இலை நெடு வேல்
10
காற்படைக் கொடியினன் கருணையோடு அமர்ந்த  
புண்ணியக் குன்றம் புடை பொலி கூடல்  
பிறைச் சடை முடியினன், பேர் அருள் அடியவர்க்கு  
ஒருகால் தவறா உடைமைத்து என்ன,  
பிரியாக் கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த
15
நெடுங் கயல் எறி விழிக் குறுந் தொடித் திருவினள்  
தெய்வம் என்று ஒரு கால் தெளியவும் உளத்து இலள்--  
பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும்  
இரு குல வேந்தர் மறு புலப் பெரும் பகை  
நீர் வடுப் பொருவ நிறுத்திடப் படரினும்,
20
ஏழ் உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த  
தன் பழங் கூடம் தனிநிலை அன்றி,  
உடு நிலை வானப் பெரு முகடு உயரச்  
செய்யும் ஓர் கூடம் புணர்த்தின்,  
நெய்ம்மிதி உண்ணாது, அவன் கடக் களிறே.
25
உரை