61. கற்புப் பயப்பு உரைத்தல்
|
|
|
|
எழு
கடல் வளைந்த பெருங்கடல் நாப்பண் |
|
பத்துடை
நூறு பொற்பு அமர் பரப்பும் |
|
ஆயிரத்து
இரட்டிக் கீழ் மேல் நிலையும் |
|
யோசனை
உடுத்த, மாசு அறு காட்சிப் |
|
பளிக்குப்
பொருப்பில், திடர் கொள் மூதூர்க் |
5
|
களவுடை
வாழ்க்கை உள மனக் கொடியோன் |
|
படர்
மலை ஏழும், குருகு அமர் பொருப்பும், |
|
மா
எனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும், |
|
கடுங்
கனல் பூழிபடும்படி நோக்கிய |
|
தாரை
எட்டு உறையும் கூர் இலை நெடு வேல் |
10
|
காற்படைக்
கொடியினன் கருணையோடு அமர்ந்த |
|
புண்ணியக்
குன்றம் புடை பொலி கூடல் |
|
பிறைச்
சடை முடியினன், பேர் அருள் அடியவர்க்கு |
|
ஒருகால்
தவறா உடைமைத்து என்ன, |
|
பிரியாக்
கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த |
15
|
நெடுங்
கயல் எறி விழிக் குறுந் தொடித் திருவினள் |
|
தெய்வம்
என்று ஒரு கால் தெளியவும் உளத்து இலள்-- |
|
பல
உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும் |
|
இரு
குல வேந்தர் மறு புலப் பெரும் பகை |
|
நீர்
வடுப் பொருவ நிறுத்திடப் படரினும், |
20
|
ஏழ்
உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த |
|
தன்
பழங் கூடம் தனிநிலை அன்றி, |
|
உடு
நிலை வானப் பெரு முகடு உயரச் |
|
செய்யும்
ஓர் கூடம் புணர்த்தின், |
|
நெய்ம்மிதி
உண்ணாது, அவன் கடக் களிறே. |
25
|