62.
மருவுதல் உரைத்தல்
|
|
|
|
பெண்
எனப் பெயரிய பெரு மகள் குலனுள், |
|
உணா
நிலன் உண்டு பராய அப் பெருந் தவம் |
|
கண்ணுற
உருப்பெறும் காட்சி-அது என்னக் |
|
கரு
உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை! |
|
நின்னையும்
கடந்தது அன்னவள் அருங் கற்பு; |
5
|
அரி
கடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற |
|
நிலமகள்
கடந்தது, நலனவள் பொறையே; |
|
இரு
வினை நாடி உயிர்தொறும் அமைத்த |
|
ஊழையும்
கடந்தது, வாய்மையின் மதனே; |
|
கற்பகம்
போலும் அற்புதம் பழுத்த |
10
|
நின்
இலம் கடந்தது, அன்னவள் இல்லம்; |
|
பேரா
வாய்மை நின் ஊரனைக் கடந்தது, |
|
மற்று-அவள்
ஊரன் கொற்ற வெண்குடையே; |
|
ஏழ்
உளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய |
|
சிற்றிலை
நெரிஞ்சில் பொற்பூ என்ன, |
15
|
நின்
முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர், |
|
மற்று-அவட்
பார்த்த மதிக் கிளையினரே; |
|
உடல்
நிழல் மான உனது அருள் நிற்கும் |
|
என்னையும்
கடந்தனள், பொன்னவட்கு இனியோள்; |
|
(கொலை
மதில் மூன்றும் இகல் அறக் கடந்து, |
20
|
பெரு-நிலவு
எறித்த புகர் முகத் துளைக் கை |
|
பொழி
மதக் கறையடி அழிதரக் கடந்து, |
|
களவில்
தொழில் செய் அரிமகன் உடலம் |
|
திருநுதல்
நோக்கத்து எரிபெறக் கடந்து, |
|
மாறுகொண்டு
அறையும் மதிநூற்கடல் கிளர் |
25
|
சமயக்
கணக்கர்தம் திறம் கடந்து, |
|
புலனொடு
தியங்கும் பொய்உளம் கடந்த-- |
|
மலருடன்
நிறைந்து வான்வழி கடந்த |
|
பொழில்
நிறை கூடல் புது மதிச் சடையோன் |
|
மன்
நிலை கடவா மனத்தவர் போல) |
30
|
ஒன்னலர்
இடும் திறைச் செலினும், |
|
தன்
நிலை கடவாது, அவன் பரித் தேரே. |
|