63.
பள்ளியிடத்து ஊடல்
|
|
|
|
நீரர
மகளிர் நெருக்குபு புகுந்து |
|
கண்
முகம் காட்டிய காட்சித்து என்ன, |
|
பெருங்
குலை மணந்த நிறைநீர்ச் சிறைப் புனல் |
|
மணி
நிறப் படாம் முதுகு இடையறப் பூத்து, |
|
சுரும்பொடு
கிடந்த சொரி இதழ்த் தாமரை |
5
|
கண்ணினும்
கொள்ளாது உண்ணவும் பெறாது, |
|
நிழல்
தலைமணந்து புனல் கிடவாது, |
|
விண்
உடைத்து உண்ணும் வினைச் சூர் கவர்ந்த |
|
வானவர்
மங்கையர் மயக்கம் போல, |
|
பிணர்க்
கரு மருப்பின் பிதிர்பட உழக்கி, |
10
|
வெண்
கார்க் கழனிக் குருகு எழப் புகுந்து, |
|
கடுக்கைச்
சிறு காய் அமைத்த வாற் கருப்பை |
|
இணை
எயிறு என்ன இடைஇடை முள் பயில் |
|
குறும்
புதல் முண்டகம் கரும்பு எனத் துய்த்து, |
|
செங்
கட் பகடு தங்கு வயல் ஊரர்க்கு, |
15
|
(அரு
மறை விதியும், உலகியல் வழக்கும், |
|
கருத்து
உறை பொருளும், விதிப்பட நினைந்து, |
|
வடசொல்
மயக்கமும் வருவன புணர்த்தி, |
|
ஐந்
திணை வழுவாது அகப்பொருள் அமுதினை, |
|
குறுமுனி
தேறவும், பெறுமுதல் புலவர்கள் |
20
|
ஏழ்-எழு
பெயரும் கோது அறப் பருகவும், |
|
புலனெறி
வழக்கில் புணர் உலகவர்க்கும், |
|
முன்
தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும், |
|
நின்று
அறிந்து உணர, தமிழ்ப் பெயர் நிறுத்தி, |
|
எடுத்துப்
பரப்பிய இமையவர் நாயகன் |
25
|
மெய்த்
தவக் கூடல்) விளைபொருள் மங்கையர் |
|
முகத்தினும்,
கண்ணினும், முண்டக முலையினும், |
|
சொல்லினும்,
துவக்கும் புல்லம் போல |
|
எம்
இடத்து இலதால்; என்னை, |
|
தம்
உளம் தவறிப் போந்தது இவ் இடனே? |
30
|