64. வழிப்படுத்து உரைத்தல்
 
   
செங்கோல்-திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய  
மறு புல வேந்தன் உறு படை எதிர்ந்த  
கொடுங்கோல்-கொற்றவன் நெடும் படை அனைத்தும்  
சேர இறந்த திருத்தகு நாளில்,  
அவன் பழி நாட்டு நடுங்கு நற் குடிகள்
5
கண்ணொடு கண்ணில் கழறிய போல,  
ஒருவரின் ஒருவர் உள்ளத்து அடக்கித்  
தோன்றா நகையுடன், துண்டமும் சுட்டி,  
அம்பல் தூற்றும் இவ் ஊர் அடக்கி,  
கடல் கிடந்தன்ன நிரைநிரை ஆய-
10
வெள்ளமும், மற்றவர் கள்ளமும் கடந்து,  
தாயவர் மயங்கும் தனித் துயர் நிறுத்தி,  
பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்து,  
கிடைப்பல் யானே நும்மை: (தழைத்து எழு  
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும்,
15
பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும்,  
முடைத்தலை, எரி, பொடி, உடைமையின் பாலையும்,  
ஆமையும் சலமும் மேவலின் மருதமும்,  
கடுவும் சங்கும் ஒளிர்தலின் நெய்தலும்,  
ஆகத் தனது பேர் அருள் மேனியில்,)
20
திணை ஐந்து அமைத்த இணைஇலி நாயகன்  
(வரும் தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே,  
எரி விரிந்தன்ன இதழ்ப் பல் தாமரை  
அருள் முகத் திருவொடு மலர்முகம் குவிய,  
மரகதப் பாசடை இடை இடை நாப்பண்
25
நீலமும் மணியும் நிரை கிடந்தென்ன  
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப,  
குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவிப்  
பாசடைக் குடம்பையூடு கண்படுப்ப,  
துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து
30
விடும் அமுது அருந்த விண்ணகத்து அணக்க,  
சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்)  
எறிதிரைப் பழனக் கூடல்  
செறிக இன்று அம்ம, திருவொடும் பொலிந்தே!  
உரை