65. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
 
   
இரு நிலம் தாங்கிய வலி கெழு நோன்மைப்  
பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து,  
திரு எனும் குழவியும், அமுது எனும் பிள்ளையும்,  
மதி எனும் மகவும், அமர் உலகு அறியக்  
கண்ணொடு முத்தம் கலுழ்ந்து, உடல் கலங்கி,
5
வாய்விட்டு அலறி, வயிறு நொந்து ஈன்ற  
மனன் எழு வருத்தம்-அது உடையைஆதலின்;  
பெரு மயல் எய்தா நிறையினள் ஆக  
என் ஒரு மயிலும் நின் மகளாக் கொண்டு,  
(தோன்றி நின்று அழியாத் துகள் அறு பெருந் தவம்
10
நிதி எனக் கட்டிய குறுமுனிக்கு, அருளுடன்  
தரளமும், சந்தும், எரி கெழு மணியும்,  
முடங்குளை அகழ்ந்த கொடுங் கரிக் கோடும்,  
அகிலும், கனகமும், அருவி கொண்டு இறங்கிப்  
பொருநை அம் கன்னிக்கு அணி அணி பூட்டும்
15
செம்பு உடல் பொதிந்த தெய்வப் பொதியமும்,  
உவட்டாது அணையாது உணர்வு எனும் பசி எடுத்து  
உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும்  
பெருந் தமிழ்-அமுதும் பிரியாது கொடுத்த)  
தோடு அணி கடுக்கைக் கூடல் எம்பெருமான்,
20
எவ் உயிர் இருந்தும் அவ் உயிர் அதற்குத்  
தோன்றாது அடங்கிய தொன்மைத்து என்ன,  
ஆர்த்து எழு பெருங் குரல் அமைந்து நின்று ஒடுங்கி, நின்  
பெருந் தீக் குணனும் ஒழிந்து, உளம் குளிருறும்  
இப் பெரு நன்றி இன்று எற்கு உதவுதி-
25
எனின் பதம் பணிகுவல் அன்றே--நன்கு அமர்  
பவள வாயும், கிளர்பச்சுடம்பும்,  
நெடுங்கயல் விழியும், நிலைமலை முலையும்,  
மாசு அறப் படைத்து, மணி உடல் நிறைத்த,  
பெரு முகில் வயிறு அளவு ஊட்டித்
30
திரு உலகு அளிக்கும், கடல்-மடமகளே!  
உரை