66. பிரிவு உணர்த்தல்
 
   
நிலையுடைப் பெருந் திரு நேர்படுகாலைக்  
காலால் தடுத்துக் கனன்று எதிர் கறுத்தும்,  
நனி நிறை செல்வ நாடும் நன் பொருளும்  
எதிர் பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும்,  
தாமரை நிதியமும் வால் வளைத் தனமும்
5
இல்லம் புகுதர இருங் கரவு அடைத்தும்,  
அரி அயன் அமரர் மலை வடம் பூட்டிப்  
பெருங் கடல் வயிறு கிடங்கு எழக் கடைந்த  
அமுதம் உட்கையில் உதவுழி ஊற்றியும்,  
மெய் உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல்,
10
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்திழை!  
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுக--  
(முழுதுற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி, முன்  
வேடம் துறவா விதியுடைச் சாக்கியன்,  
அருட்கரை காணா, அன்பு எனும் பெருங் கடல்
15
பல நாள் பெருகி, ஒரு நாள் உடைந்து,  
கரை நிலை இன்றிக் கையகன்றிடலும்,  
எடுத்துடைக் கல் மலர் தொடுத்து, அவை சாத்திய,  
பேர் ஒளி இணையாக் கூடல் மா மணி--  
குல மலைக் கன்னி என்று, அருள் குடியிருக்கும்
20
விதி நெறி தவறா ஒரு பங்கு உடைமையும்,  
பறவை செல்லாது நெடு முகடு உருவிய  
சேகரத்து உறங்கும் திருநதித் துறையும்,  
நெடும் பகல் ஊழி நினைவுடன் நீந்தினும்  
அருங் கரை இறந்த ஆகமக்கடலும்,
25
இளங் கோவினர்கள் இரண்டு அறி பெயரும்,  
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்துப்  
பறந்தும் அகழ்ந்தும், படி இது என்னாது  
அறிவு அகன்று உயர்ந்த கழல் மணி முடியும்  
உடைமையன்--பொற்கழல் பேணி
30
அடையலர் போல) மருள் மனம் திரிந்தே!  
உரை