66.
பிரிவு உணர்த்தல்
|
|
|
|
நிலையுடைப்
பெருந் திரு நேர்படுகாலைக் |
|
காலால்
தடுத்துக் கனன்று எதிர் கறுத்தும், |
|
நனி
நிறை செல்வ நாடும் நன் பொருளும் |
|
எதிர்
பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும், |
|
தாமரை
நிதியமும் வால் வளைத் தனமும் |
5
|
இல்லம்
புகுதர இருங் கரவு அடைத்தும், |
|
அரி
அயன் அமரர் மலை வடம் பூட்டிப் |
|
பெருங்
கடல் வயிறு கிடங்கு எழக் கடைந்த |
|
அமுதம்
உட்கையில் உதவுழி ஊற்றியும், |
|
மெய்
உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல், |
10
|
எழு
கதிர் விரிக்கும் மணி கெழு திருந்திழை! |
|
நின்
பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுக-- |
|
(முழுதுற
நிறைந்த பொருள் மனம் நிறுத்தி, முன் |
|
வேடம்
துறவா விதியுடைச் சாக்கியன், |
|
அருட்கரை
காணா, அன்பு எனும் பெருங் கடல் |
15
|
பல
நாள் பெருகி, ஒரு நாள் உடைந்து, |
|
கரை
நிலை இன்றிக் கையகன்றிடலும், |
|
எடுத்துடைக்
கல் மலர் தொடுத்து, அவை சாத்திய, |
|
பேர்
ஒளி இணையாக் கூடல் மா மணி-- |
|
குல
மலைக் கன்னி என்று, அருள் குடியிருக்கும் |
20
|
விதி
நெறி தவறா ஒரு பங்கு உடைமையும், |
|
பறவை
செல்லாது நெடு முகடு உருவிய |
|
சேகரத்து
உறங்கும் திருநதித் துறையும், |
|
நெடும்
பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் |
|
அருங்
கரை இறந்த ஆகமக்கடலும், |
25
|
இளங்
கோவினர்கள் இரண்டு அறி பெயரும், |
|
அன்னமும்
பன்றியும் ஒல்லையின் எடுத்துப் |
|
பறந்தும்
அகழ்ந்தும், படி இது என்னாது |
|
அறிவு
அகன்று உயர்ந்த கழல் மணி முடியும் |
|
உடைமையன்--பொற்கழல்
பேணி |
30
|
அடையலர்
போல) மருள் மனம் திரிந்தே! |
|