69.
பதி பரிசு உரைத்தல்
|
|
|
|
எரி
தெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை; |
|
முகில்
தலை சுமந்து ஞிமிறு எழுந்து இசைக்கும் |
|
பொங்கருள்
படுத்த மலர் கால் பொருந்துக! |
|
கடுங்
கடத்து, எறிந்த கொடும் புலிக்கு ஒடுங்கினை; |
|
வரி
உடற் செங் கண் வராலினம் எதிர்ப்ப, |
5
|
உழவக்
கணத்தர் உடைவது நோக்குக! |
|
கொலைஞர்
பொலிந்த கொடித் தேர்க்கு அணங்கினை; |
|
வேதியர்
நிதி மிக விதிமகம் முற்றி, |
|
அவபிர
தத்துறை ஆடுதல் கெழுமி, |
|
பொன்
உருள் வையம் போவது காண்க! |
10
|
ஆறு
அலை எயினர் அமர்க் கலிக்கு அழுங்கினை; |
|
பணைத்து
எழு சாலி நெருக்குபு புகுந்து, |
|
கழுநீர்
களைநர்தம் கம்பலை காண்க! |
|
தழல்
தலைப்படுத்த பரல் முரம்பு அடுத்தனை; |
|
சுரி
முகக் குழு வளை நிலவு எழச் சொரிந்த |
15
|
குளிர்
வெண் தரளக் குவால் இவை காண்க! |
|
அலகை
நெட்டிரதம் புனல் எனக் காட்டினை; |
|
வன்மீன்
நெடுங் கயல் பொதி வினையகத்துக் |
|
கிடங்கு
எனப் பெயரிய கருங் கடல் காண்க! |
|
முனகர்கள்
பூசல் துடி ஒலி ஏற்றனை; |
20
|
குடுமிஅம்
சென்னியர் கரு முகில் விளர்ப்பக் |
|
கிடை
முறை எடுக்கும் மறை ஒலி கேண்மதி! |
|
அமரர்கள்,
முனிக் கணத்தவர், முன் தவறு |
|
புரிந்து,
உடன் உமை கண் புதைப்ப, மற்று, உமையும் |
|
ஆடகச்
சயிலச் சேகரம் தொடர்ந்த |
25
|
ஒற்றைஅம்
பசுங் கழை ஒல்கிய போல, |
|
உலகு
உயிர்க்கு உயிர் எனும் திருஉரு அணைந்து, |
|
வளைக்
கரம்கொடு கண் புதைப்ப, அவ்வுழியே |
|
உலகு
இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர், |
|
பிரமன்
உட்பட்ட நில உயிர் அனைத்தும் |
30
|
தமக்கு
எனக் காட்டும் ஒளிக் கண் கெடலும், |
|
மற்று-அவர்
மயக்கம் கண்டு, அவர் கண் பெறத் |
|
திரு
நுதல் கிழித்த தனி விழி நாயகன் |
|
தாங்கிய
கூடல்-பெரு நகர் |
|
ஈங்கு
இது காண்க!--முத்து எழில் நகைக் கொடியே! |
35
|