7. நற்றாய்
வருந்தல்
|
|
|
|
பொடித்து
அரும்பாத சின் முலைக் கொடிமடந்தையள், |
|
மணி
மிளிர் பெருங் கட்கு இமை காப்பு என்ன, |
|
விழித்துழி
விழித்தும், அடங்குழி அடங்கியும், |
|
தன்னை
நின்று அளித்த என்னையும் ஒருவுக; |
|
பல்
மணிக் கலன்கள் உடற்கு அழகு அளித்தென, |
5
|
சுற்று
உடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக; |
|
பிணிமுக-மஞ்ஞை
செருமுகத்து ஏந்திய |
|
மூ-இரு
திருமுகத்து ஒரு வேலவற்கு, |
|
வான்
உற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின், |
|
மனவு
அணி மடந்தை, வெறியாட்டாளன், |
10
|
வேல்மகன்,
குறத்தி, மா மதி முதியோள்-- |
|
தொண்டகம்
துவைப்ப, முருகு-இயம் கறங்க-- |
|
ஒருங்கு
வந்து, இமையா அருங் கடன் முற்றிய |
|
பின்னர்,
நின்று ஏற்ற கைத்தாயையும் பிழைக்குக; |
|
கருந்
தலைச் சாரிகை, செவ் வாய்ப் பசுங்கிளி, |
15
|
தூவி
அம் தோகை, வெள் ஓதிமம், தொடர் உழை, |
|
இவையுடன்
இன்பமும் ஒருவழி இழக்குக; |
|
(சேயிதழ்
இலவத்து உடைகாய்ப் பஞ்சி |
|
புகை
முரிந்து எழுந்தென விண்ணத்து அலமர, |
|
குழை
பொடி கூவையின் சிறை, சிறை தீந்த |
20
|
பருந்தும்
ஆந்தையும் பார்ப்புடன் தவழ, |
|
உடை
கவட்டு ஓமை உலர் சினை இருக்கும் |
|
வளை
கட் கூகையும் மயங்கி வாய் குழற, |
|
ஆசையின்
தணியா அழல் பசி தணிக்கக் |
|
காளிமுன்
காவல் காட்டி வைத்து ஏகும் |
25
|
குழிகட்
கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப, |
|
வேம்
உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப, |
|
நெடுந்
தாட் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப, |
|
திசை
நின்று எழாது, தழல் முகம் தெறிப்ப, |
|
சுடலையில்,
சூறை இடை இடை அடிக்கும் |
30
|
பேர்
அழற் கானினும், நாடும் என் உளத்தினும், |
|
ஒரு
பால் பசுங்கொடி நிறை பாட்டு அயர, |
|
பாரிடம்
குனிப்ப, ஆடிய பெருமான்) |
|
வையகத்து
உருவினர் மலர் ஆவறிவினைப் |
|
புலன்
நிரை மறைத்த புணர்ப்பு-அதுபோல, |
35
|
குளிர்
கொண்டு உறையும் தெளிநீர் வாவியை |
|
வள்ளை,
செங்கமலம், கள் அவிழ் ஆம்பல், |
|
பாசடை
மறைக்கும் கூடல் பெருமான் |
|
செந்
தாள் விடுத்து உறை அந்தர்கள் தம்மினும், |
|
மூவாத்
தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் |
40
|
இரண்டு
எனக் கவைத்த நல் அரண் தரு தோழியை, |
|
செரு
விழும் இச்சையர், தமது உடல் பெற்ற |
|
இன்புகள்
நோக்கா இயல்பு-அது போல, |
|
மருங்கு
பின் நோக்காது, ஒருங்கு விட்டு அகல, |
|
பொருந்தியது,
எப்படி, உள்ளம்-- |
45
|
அருந்
தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே? |
|