70. தேறாது புலம்பல்
 
   
புட்பெயர்க் குன்றமும், எழு வகைப் பொருப்பும்,  
மேல் கடல் கவிழ் முகப் பொரி உடல் மாவும்,  
நெடுங் கடல் பரப்பும், அடும் தொழில் அரக்கரும்,  
என் உளத்து இருளும், இடைபுகுந்து உடைத்த  
மந்திரத் திரு வேல் மறம் கெழு மயிலோன்,
5
குஞ்சரக் கொடியொடும் வள்ளிஅம் கொழுந்தொடும்  
கூறாக் கற்பம் குறித்து நிலை செய்த,  
புண்ணியம் குமிழ்த்த குன்றுடைக் கூடல்  
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான்  
பேர் அருள் விளைத்த மாதவர் போல,
10
முன் ஒரு நாளில், உடல் உயிர் நீ என  
உள்ளம் கரிவைத்து, உரை செய்த ஊரர்  
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல்,  
அவர் குறை அன்றால்; ஒருவன் படைத்த  
காலக் குறிகொல்? அன்றியும், முன்னைத்
15
தியங்கு உடல் ஈட்டிய தரும் கடு வினையால்,  
காலக் குறியை, மனம் தடுமாறிப்  
பின் முன் குறித்த நம் பெரு மதி அழகால்,  
நனவிடை நவிற்றிக் கனவிடைக் கண்ட  
உள் எழு கலக்கத்துடன் மயங்கினமால்;
20
குறித்த இவ் இடைநிலை ஒன்றே--  
மறிக் குலத்து உழையின் வழி நோக்கினளே!  
உரை