73.
அயல் அறிவு உரைத்து அவள் அழுக்கம் எய்தல்
|
|
|
|
ஆடகச்
சயிலத்து ஓர் உடல் பற்றி, |
|
கலி
திரைப் பரவையும், கனன்று எழு வடவையும், |
|
அடியினும்,
முடியினும், அணைந்தன போல, |
|
பசுந்
தழைத் தோகையும், செஞ் சிறைச் சேவலும், |
|
தாங்கியும்,
மலர்க்கரம் தங்கியும், நிலைத்த |
5
|
பேர்
ஒளி மேனியன்; பார் உயிர்க்கு ஓர் உயிர்; |
|
மாவுடைக்
கூற்றம்; மலர் மயன் தண்டம்; |
|
குறுமுனி
பெறும் மறை; நெடு மறை பெறா முதல்; |
|
குஞ்சரத்
தோகையும் குறமகட் பேதையும் |
|
இருந்தன
இரு புறத்து எந்தை; என் அமுதம்-- |
10
|
பிறந்தருள்
குன்றம் ஒருங்குறப் பெற்ற |
|
மாதவக்
கூடல் மதிச் சடைக் காரணன் |
|
இரு
பதம் தேறா இருள் உளம் ஆம் என, |
|
இவள்
உளம் கொட்ப, அயல் உளம் களிப்ப-- |
|
அரும்
பொருட் செல்வி எனும் திருமகட்கு, |
15
|
மானிட
மகளிர்தாமும், நின்று எதிர்ந்து, |
|
புல்
இதழ்த் தாமரை இல் அளித்தெனவும்; |
|
உலகு,
விண், பனிக்கும் ஒரு சயமகட்கு, |
|
தேவர்தம்
மகளிரும் செருமுகம் நேர்ந்து, |
|
வீரம்
அங்கு ஈந்து பின் விளிவது மானவும்; |
20
|
இருள்
உடல் அரக்கியர் கலைமகட் கண்டு, |
|
தென்
தமிழ், வட கலை, சில கொடுத்தெனவும்; |
|
நீரர
மகளிர் பாந்தள்அம் கன்னியர்க்கு, |
|
ஆர்
எரி மணித்திரள் அருளியது எனவும்; |
|
செம்
மலர்க் குழல் இவள் போய் அறிவுறுத்தக் |
25
|
கற்றதும்;
கல்லாது உற்ற ஊரனை |
|
அவள்
தர--இவள் பெறும் அரந்தைஅம் பேறினுக்கு |
|
ஒன்றிய
உவமம் இன்று: இவண் உளவால், |
|
மற்று-அவள்
தர, நெடுங் கற்பே |
|
உற்று
இவள் பெற்றாள் என்பதும் தகுமே. |
30
|