73. அயல் அறிவு உரைத்து அவள் அழுக்கம் எய்தல்
 
   
ஆடகச் சயிலத்து ஓர் உடல் பற்றி,  
கலி திரைப் பரவையும், கனன்று எழு வடவையும்,  
அடியினும், முடியினும், அணைந்தன போல,  
பசுந் தழைத் தோகையும், செஞ் சிறைச் சேவலும்,  
தாங்கியும், மலர்க்கரம் தங்கியும், நிலைத்த
5
பேர் ஒளி மேனியன்; பார் உயிர்க்கு ஓர் உயிர்;  
மாவுடைக் கூற்றம்; மலர் மயன் தண்டம்;  
குறுமுனி பெறும் மறை; நெடு மறை பெறா முதல்;  
குஞ்சரத் தோகையும் குறமகட் பேதையும்  
இருந்தன இரு புறத்து எந்தை; என் அமுதம்--
10
பிறந்தருள் குன்றம் ஒருங்குறப் பெற்ற  
மாதவக் கூடல் மதிச் சடைக் காரணன்  
இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என,  
இவள் உளம் கொட்ப, அயல் உளம் களிப்ப--  
அரும் பொருட் செல்வி எனும் திருமகட்கு,
15
மானிட மகளிர்தாமும், நின்று எதிர்ந்து,  
புல் இதழ்த் தாமரை இல் அளித்தெனவும்;  
உலகு, விண், பனிக்கும் ஒரு சயமகட்கு,  
தேவர்தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து,  
வீரம் அங்கு ஈந்து பின் விளிவது மானவும்;
20
இருள் உடல் அரக்கியர் கலைமகட் கண்டு,  
தென் தமிழ், வட கலை, சில கொடுத்தெனவும்;  
நீரர மகளிர் பாந்தள்அம் கன்னியர்க்கு,  
ஆர் எரி மணித்திரள் அருளியது எனவும்;  
செம் மலர்க் குழல் இவள் போய் அறிவுறுத்தக்
25
கற்றதும்; கல்லாது உற்ற ஊரனை  
அவள் தர--இவள் பெறும் அரந்தைஅம் பேறினுக்கு  
ஒன்றிய உவமம் இன்று: இவண் உளவால்,  
மற்று-அவள் தர, நெடுங் கற்பே  
உற்று இவள் பெற்றாள் என்பதும் தகுமே.
30
உரை