74. பிரிந்தமை கூறல்
 
   
மலரவன் பனிக்கும் கவினும், குலமீன்  
அருகிய கற்பும், கருதி, உள் நடுங்கித்  
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை, இன்று,  
இரு கடல் ஓர் உழி மருவியது என்னச்  
செருப் படை வேந்தர் முனைமேல் படர்ந்த நம்
5
காதலர், முனைப் படை கனன்று உடற்று எரியால்,  
(முடம் படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த  
நெடுங் சால் போகிக் கடுங் கயல் துரக்கும்  
மங்கையர் குழை பெறு வள்ளையில் தடை கொண்டு,  
அவர் கருங் கண் எனக் குவளை பூத்த
10
இருள் அகச் சோலையுள் இரவு எனத் தங்கிய  
மற்று அதன் சேக்கையுள் வதிபெறும் செங் கால்  
வெள் உடல் ஓதிமம் தன்னுடைப் பெடை எனப்  
பறை வரத் தழீஇப் பெற்று, உவை இனக் கம்பலைக்கு  
ஆற்றாது அகன்று, தேக்கு வழி கண்ட
15
கால் வழி இறந்து, பாசடை பூத்த  
கொள்ளம் புகுந்து, வள் உறை வானத்து  
எழில் மதி காட்டி, நிறைவளை சூல் உளைந்து,  
இடங்கரும் ஆமையும் எழு வெயில் கொளுவும்  
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி,
20
முழுமதி, உடுக்கணம், காதலின் விழுங்கி  
உமிழ்வன போல, சுரிமுகச் சூல் வளை  
தரளம் சொரியும் பழனக் கூடல்)  
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன்,  
இமையவர் வேண்ட, ஒரு நகை முகிழ்ப்ப,
25
ஓர் உழிக் கூடாது உம்பரில் புகுந்து  
வான் உடைத்து உண்ணும் மறக் கொலை அரக்கர் முப்  
பெரு மதில் பெற்றன அன்றோ--  
மருவலர் அடைத்த, முன், மறம் கெழு மதிலே?  
உரை