74. பிரிந்தமை கூறல்
|
|
|
|
மலரவன்
பனிக்கும் கவினும், குலமீன் |
|
அருகிய
கற்பும், கருதி, உள் நடுங்கித் |
|
திருமகள்
மலர் புகும் ஒரு தனி மடந்தை, இன்று, |
|
இரு
கடல் ஓர் உழி மருவியது என்னச் |
|
செருப்
படை வேந்தர் முனைமேல் படர்ந்த நம் |
5
|
காதலர்,
முனைப் படை கனன்று உடற்று எரியால், |
|
(முடம்
படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த |
|
நெடுங்
சால் போகிக் கடுங் கயல் துரக்கும் |
|
மங்கையர்
குழை பெறு வள்ளையில் தடை கொண்டு, |
|
அவர்
கருங் கண் எனக் குவளை பூத்த |
10
|
இருள்
அகச் சோலையுள் இரவு எனத் தங்கிய |
|
மற்று
அதன் சேக்கையுள் வதிபெறும் செங் கால் |
|
வெள்
உடல் ஓதிமம் தன்னுடைப் பெடை எனப் |
|
பறை
வரத் தழீஇப் பெற்று, உவை இனக் கம்பலைக்கு |
|
ஆற்றாது
அகன்று, தேக்கு வழி கண்ட |
15
|
கால்
வழி இறந்து, பாசடை பூத்த |
|
கொள்ளம்
புகுந்து, வள் உறை வானத்து |
|
எழில்
மதி காட்டி, நிறைவளை சூல் உளைந்து, |
|
இடங்கரும்
ஆமையும் எழு வெயில் கொளுவும் |
|
மலை
முதுகு அன்ன குலை முகடு ஏறி, |
20
|
முழுமதி,
உடுக்கணம், காதலின் விழுங்கி |
|
உமிழ்வன
போல, சுரிமுகச் சூல் வளை |
|
தரளம்
சொரியும் பழனக் கூடல்) |
|
குவளை
நின்று அலர்ந்த மறை எழு குரலோன், |
|
இமையவர்
வேண்ட, ஒரு நகை முகிழ்ப்ப, |
25
|
ஓர்
உழிக் கூடாது உம்பரில் புகுந்து |
|
வான்
உடைத்து உண்ணும் மறக் கொலை அரக்கர் முப் |
|
பெரு
மதில் பெற்றன அன்றோ-- |
|
மருவலர்
அடைத்த, முன், மறம் கெழு மதிலே? |
|