75. கலக்கம் கண்டு உரைத்தல்
 
   
'பெருந் துயர் அகற்றி, அறம் குடி நாட்டி,  
உளச் சுருள் விரிக்கும் நலத் தகு கல்வி ஒன்று  
உளது' என, குரிசில் ஒரு மொழி சாற்ற--  
(பேழ்வாய்க் கொய்உளை அரி சுமந்து எடுத்த  
பல் மணி ஆசனத்து இருந்து, செவ் வானின்
5
நெடுஞ் சடைக் குறுஞ் சுடர், நீக்கி, ஐந்து அடுக்கிய  
ஆறு-ஐஞ்ஞூறொடு வேறு நிரை அடுத்த  
பல் மணி மிளிர் முடி பலர் தொழக் கவித்து,  
பல் தலைப் பாந்தட் சுமை திருத் தோளில்  
தரித்து, உலகு அளிக்கும் திருத்தகு நாளில்,
10
நெடு நாள் திருவயிற்று அருளுடன் இருந்த  
நெடுஞ் சடை உக்கிரற் பயந்தருள் நிமலன்,  
மற்று-மவன்தன்னால், வடவையின் கொழுந்து சுட்டு  
ஆற்றாது, உடலமும், இமைக்குறும் முத்தமும்,  
விளர்த்து நின்று அணங்கி, வளைக்குலம் முழங்கும்
15
கருங் கடல் பொரிய, ஒருங்கு வேல் விடுத்து,  
அவற்க அருள் கொடுத்த முதற் பெருநாயகன்)  
வெம்மையும் தண்மையும் வினை உடற்கு ஆற்றும்  
இரு சுடர், ஒரு சுடர், புணர்விழி ஆக்கி, முன்  
விதியவன் தாரா உடலொடு நிலைத்த
20
முத் தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள்  
கனவிலும் காணாக் கண்ணினர் துயரும்,  
பகுத்து உண்டு ஈகுநர் நிலைத் திரு முன்னர்,  
'இல்' எனும் தீச் சொல் இறுத்தனர் தோமும்,  
அனைத்து உயிர் ஒம்பும் அறத்தினர் பாங்கர்,
25
'கோறல்' என்று அயலினர் குறித்தன குற்றமும்,  
நன்று அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு  
அவ் அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும்--  
ஒரு கணம் கூடி, ஒருங்கே  
இரு செவி புக்கது ஒத்தன, இவட்கே.
30
உரை