76. முன்பனிக்கு நொந்து உரைத்தல்
 
   
கடல்மகள், உள் வைத்து வடவை, மெய் காயவும்,  
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும்,  
மாசு அறு திருமகள் மலர் புகுந்து, ஆயிரம்  
புற இதழ்ப் புதவு அடைத்து, அதன் வெதுப்பு உறைக்கவும்,  
சமயமகள் சீற்றத் தழல் மனம் வைத்துத்
5
திணி புகும் வென்றிச் செரு அழல் கூடவும்,  
ஐயர் பயிற்றிய விதி அழல் ஓம்பவும்,  
அவ் அனற்கு அமரர் அனைத்தும் வந்து அணையவும்,  
(முன் இடைக்காடன் பின் எழ நடந்து,  
நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து, என்
10
நெஞ்சகம் நின்று, நினைவினுள் மறைந்து,  
புரை அறும் அன்பினர் விழி பெறத் தோற்றி,  
வானவர் நெடு முடி மணித் தொகை திரட்டிப்  
பதுக்கை செய் அம்பலத் திருப் பெரும் பதியினும்,  
பிறவாப் பேர் ஊர்ப் பழ நகரிடத்தும்,
15
மகிழ் நடம் பேய் பெறும் வடவனக் காட்டினும்,  
அரு மறை முடியினும், அடியவர் உளத்தினும்,  
குனித்து அருள் நாயகன்) குல மறை பயந்தோன்  
இருந் தமிழ்க் கூடல், பெருந் தவர் காண,  
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய ஞான்று,
20
நெருப்பொடு சுழலவும், விருப்பு எடுத்து அவ் அழல்  
கையினில் கொள்ளவும், கரி உரி மூடவும்,  
ஆக்கிய பனிப்பகைக் கூற்று இவை நிற்க--  
அங்கு, அவர் துயர் பெற ஈன்ற என் ஒருத்தி  
புகல் விழும் அன்பு தற்கு இன்றி
25
மகவினைப் பெறலாம் வரம் வேண்டினளே.
உரை