77. மறவாமைருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என்  
   
மரு வளர் குவளை மலர்ந்து, முத்து அரும்பி,  
பசுந் தோள்-தோன்றி மலர் நனி மறித்து,  
நெட்டெறி ஊதை நெருப்பொடு கிடந்து,  
மணி புறம் கான்ற புரிவளை விம்மி,  
விதிப்பவன் விதியா ஓவம் நின்றென, என்,
5
உள்ளமும் கண்ணும் நிலையுறத் தழீஇனள்--  
(உவணக் கொடியினன் உந்தி மலர்த் தோன்றிப்  
பார் முதல் படைத்தவன் நடுத் தலை அறுத்து,  
புனிதக் கலன் என உலகு தொழக் கொண்டு--  
வட்டம், முக்கோணம், சதுரம், கார்முகம்,
10
நவத்தலை, தாமரை, வளைவாய்ப் பருந்து, எனக்  
கண்டன--மகம்தொறும் கலிபெறச் சென்று,  
நறவு இரந்தருளிய பெரியவர் பெருமான்;  
கூக்குரல் கொள்ளாக் கொலை தரு நவ்வியும்,  
விதிர் ஒளி காற்றக் கனல் குளிர் மழுவும்,
15
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன்)  
கூடல் ஒப்பு உடையாய்! குல உடுத் தடவும்  
தட மதில் வயிற்றுள் படும் அவர் உயிர்க்கணம்  
தனித்தனி ஒளித்துத் தணக்கினும் அரிது எனப்  
போக்கு அற வளைந்து புணர் இருள் நாளும்,
20
காவல் காட்டிய வழியும்,  
தேவர்க் காட்டும் நம் பாசறையினுமே.
உரை