78. ஊடி உரைத்தல்
 
   
மதியம் உடல் குறைத்த வெள்ளாங்குருகினம்,  
பைங் கால் தடவிச் செங் கயல் துரந்து உண்டு,  
கழுக்கடை அன்ன தம் கூர்வாய்ப் பழிப் புலவு,  
எழில் மதி விரித்த வெண் தளை இதழ்த் தாமரை  
மலர்மலர் துவட்டும் வயல் அணி ஊர!
5
கோளகைக் குடிலில் குனிந்து இடைந்து, அப்புறத்து,  
இடைநிலை அற்ற படர் பெரு வெளியகத்து  
உடல் முடக்கு எடுத்த, தொழிற் பெரு வாழ்க்கைக்  
கவைத்தலைப் பிறை எயிற்று இருள் எழில் அரக்கன்--  
அமுதம் உண்டு இமையா அவரும், மங்கையரும்,
10
குறவரும் குறவத் துணையரும் ஆகி,  
நிலம் பெற்று இமைத்து, நெடு வரை இறும்பிடை,  
பறவை உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி,  
அந் நிலத்தவர் என அடிக்கடி வணங்கும்--  
வெள்ளிஅம் குன்றகம் உள்ளுறப் புகுந்து, 'ஒரு
15
தேவனும் அதன் முடி மேவவும் உளன் ஆம்'  
எனப் புயம் கொட்டி நகைத்து, எடுத்து ஆர்க்க,  
பிலம் திறந்தன்ன பெரு வாய் ஒருபதும்,  
மலை நிரைத்து ஒழுங்கிய கரம் இருபத்தும்,  
விண் உடைத்து அரற்றவும், திசை உட்கி முரியவும்,
20
தாமரை அகவயின் சேயிதழ் வாட்டிய  
திருவடிப் பெரு விரல்-தலை நக நுதியால்,  
சிறிது, மலை உறைத்த மதி முடி அந்தணன்,  
பொன் அணி மாடம் பொலி நகர்க்) கூடல்  
ஆவண வீதி அனையவர் அறிவுறில்,
25
ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என்  
இணை முலை நன்னர் இழந்தன-அது போல்,  
மற்று-அவர் கவை மனம் மாழ்கி,  
செற்றம் நிற் புகைவர்; இக் கால் தீண்டலையே.
உரை