78.
ஊடி உரைத்தல்
|
|
|
|
மதியம்
உடல் குறைத்த வெள்ளாங்குருகினம், |
|
பைங்
கால் தடவிச் செங் கயல் துரந்து உண்டு, |
|
கழுக்கடை
அன்ன தம் கூர்வாய்ப் பழிப் புலவு, |
|
எழில்
மதி விரித்த வெண் தளை இதழ்த் தாமரை |
|
மலர்மலர்
துவட்டும் வயல் அணி ஊர! |
5
|
கோளகைக்
குடிலில் குனிந்து இடைந்து, அப்புறத்து, |
|
இடைநிலை
அற்ற படர் பெரு வெளியகத்து |
|
உடல்
முடக்கு எடுத்த, தொழிற் பெரு வாழ்க்கைக் |
|
கவைத்தலைப்
பிறை எயிற்று இருள் எழில் அரக்கன்-- |
|
அமுதம்
உண்டு இமையா அவரும், மங்கையரும், |
10
|
குறவரும்
குறவத் துணையரும் ஆகி, |
|
நிலம்
பெற்று இமைத்து, நெடு வரை இறும்பிடை, |
|
பறவை
உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி, |
|
அந்
நிலத்தவர் என அடிக்கடி வணங்கும்-- |
|
வெள்ளிஅம்
குன்றகம் உள்ளுறப் புகுந்து, 'ஒரு |
15
|
தேவனும்
அதன் முடி மேவவும் உளன் ஆம்' |
|
எனப்
புயம் கொட்டி நகைத்து, எடுத்து ஆர்க்க, |
|
பிலம்
திறந்தன்ன பெரு வாய் ஒருபதும், |
|
மலை
நிரைத்து ஒழுங்கிய கரம் இருபத்தும், |
|
விண்
உடைத்து அரற்றவும், திசை உட்கி முரியவும், |
20
|
தாமரை
அகவயின் சேயிதழ் வாட்டிய |
|
திருவடிப்
பெரு விரல்-தலை நக நுதியால், |
|
சிறிது,
மலை உறைத்த மதி முடி அந்தணன், |
|
பொன்
அணி மாடம் பொலி நகர்க்) கூடல் |
|
ஆவண
வீதி அனையவர் அறிவுறில், |
25
|
ஊருணி
அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் |
|
இணை
முலை நன்னர் இழந்தன-அது போல், |
|
மற்று-அவர்
கவை மனம் மாழ்கி, |
|
செற்றம்
நிற் புகைவர்; இக் கால் தீண்டலையே. |
|