79.
தோழி பொறை உவந்து உரைத்தல்
|
|
|
|
உலர்
கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும், |
|
வீசு
கோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர, |
|
திரை
விழிப் பருந்தினம் வளை உகிர்ப் படையால் |
|
பார்ப்பு
இரை கவரப் பயன் உறும் உலகில், |
|
கடன்
உறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத் |
5
|
தழல்
உணக் கொடுத்த அதன் உணவிடையே, |
|
கைவிளக்கு
எடுத்துக் கரை இனம் கரைய, |
|
பிணம்
விரித்து உண்ணும் குணங்கினம் கொட்ப, |
|
சூற்
பேய் ஏற்ப, இடாகினி கரப்ப, |
|
கண்டு
உளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி, |
10
|
பிறைநுதல்
நாட்டி, கடு வளர் கண்டி, |
|
இறால்
நறவு அருவி எழு பரங்குன்றத்து |
|
உறை
சூர்ப் பகையினற் பெறு திருவயிற்றினள் |
|
ஒரு
பால் பொலிந்த உயர்நகர்க் கூடல் |
|
கடுக்கைஅம்
சடையினன் கழல் உளத்து இலர் போல், |
15
|
பொய்
வரும் ஊரன் புகல் அரும் இல் புக, |
|
என்
உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க, |
|
மதுப்
பொழி முளரியின் மாழ்கின என்றால், |
|
தோளில்
துவண்டும், தொங்கலுள் மறைந்தும், |
|
கை
வரல் ஏற்றும், கனவினுள் தடைந்தும், |
20
|
திரைக்
கடல் தெய்வமுன் தெளி சூள் வாங்கியும். |
|
பொருட்
கான் தடைந்தும், பாசறைப் பொருந்தியும், |
|
போக்கு
அருங் கடுஞ் சுரம் போக முன் இறந்தும், |
|
காவலில்
கவன்றும், கல்வியில் கருதியும், |
|
வேந்து
விடைக்கு அணங்கியும், விளைபொருட்கு உருகியும், |
25
|
நின்ற
இவட்கு இனி என் ஆம்-- |
|
கன்றிய
உடலுள் படும் நனி உயிரே? |
|