79. தோழி பொறை உவந்து உரைத்தல்
 
   
உலர் கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும்,  
வீசு கோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர,  
திரை விழிப் பருந்தினம் வளை உகிர்ப் படையால்  
பார்ப்பு இரை கவரப் பயன் உறும் உலகில்,  
கடன் உறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத்
5
தழல் உணக் கொடுத்த அதன் உணவிடையே,  
கைவிளக்கு எடுத்துக் கரை இனம் கரைய,  
பிணம் விரித்து உண்ணும் குணங்கினம் கொட்ப,  
சூற் பேய் ஏற்ப, இடாகினி கரப்ப,  
கண்டு உளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி,
10
பிறைநுதல் நாட்டி, கடு வளர் கண்டி,  
இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து  
உறை சூர்ப் பகையினற் பெறு திருவயிற்றினள்  
ஒரு பால் பொலிந்த உயர்நகர்க் கூடல்  
கடுக்கைஅம் சடையினன் கழல் உளத்து இலர் போல்,
15
பொய் வரும் ஊரன் புகல் அரும் இல் புக,  
என் உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க,  
மதுப் பொழி முளரியின் மாழ்கின என்றால்,  
தோளில் துவண்டும், தொங்கலுள் மறைந்தும்,  
கை வரல் ஏற்றும், கனவினுள் தடைந்தும்,
20
திரைக் கடல் தெய்வமுன் தெளி சூள் வாங்கியும்.
பொருட் கான் தடைந்தும், பாசறைப் பொருந்தியும்,  
போக்கு அருங் கடுஞ் சுரம் போக முன் இறந்தும்,  
காவலில் கவன்றும், கல்வியில் கருதியும்,  
வேந்து விடைக்கு அணங்கியும், விளைபொருட்கு உருகியும்,
25
நின்ற இவட்கு இனி என் ஆம்--  
கன்றிய உடலுள் படும் நனி உயிரே?  
உரை