80.
கலவி கருதிப் புலத்தல்
|
|
|
|
நிலை
நீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி, |
|
வான்
தவழ் உடற் கறை மதி எனச் சுருங்கி, |
|
புல்லர்
வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும் |
|
சீறுணவு
இன்பத் திருந்தா வாழக்கை, |
|
கான்றிடு
சொன்றியின் கண்டு, அருவருத்து, |
5
|
புலன்
அறத் துடைத்த நலன் உறு கேள்வியர், |
|
ஆரா
இன்பப் பேர் அமுது அருந்தி, |
|
துறவு
எனும் திருவுடன் உறவு செய் வாழ்க்கையர், |
|
வாயினும்,
கண்ணினும், மனத்தினும், அகலாப் |
|
பேர்
ஒளி நாயகன்; கார் ஒளி மிடற்றோன்; |
10
|
மண்
திரு வேட்டுப் பஞ்சவற் பொருத |
|
கிள்ளியும்,
கிளையும், கிளர் படை நான்கும், |
|
திண்மையும்,
செருக்கும், தேற்றமும், பொன்றிட, |
|
எரிவாய்
உரகர் இருள் நாட்டு உருவக் |
|
கொலைக்
கொண்டாழி குறியுடன் படைத்து, |
15
|
மறியப்
புதைத்த மறம் கெழு பெருமான்; |
|
நீர்
மாக் கொன்ற சேயோன் குன்றமும், |
|
கல்வியும்,
திருவும், காலமும், கொடியும், |
|
மாடமும்,
ஓங்கிய மணி நகர்க் கூடல் |
|
ஆலவாயினில்
அருளுடன் நிறைந்த |
20
|
பவளச்
சடையோன்--பதம் தலை சுமந்த |
|
நல்
இயல் ஊர! நின் புல்லம் உள் மங்கையர் |
|
ஓவிய
இல்லம் எம் உறையுள் ஆக, |
|
கேளாச்
சிறு சொல் கிளக்கம் கலதியர் |
|
இவ்வுழி
ஆயத்தினர்களும் ஆக, |
25
|
மௌவல்
இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் |
|
முன்றிலும்
எம்முடை முன்றில் ஆக, |
|
மலர்ச்
சுமைச் சேக்கை மது மலர் மறுத்த இத் |
|
திருமனம்
கொள்ளாச் சேக்கை-அது ஆக, |
|
நின்
உளம் கண்டு, நிகழ் உணவு உன்னி, |
30
|
நாணா
நவப் பொய் பேணி உள் புணர்த்தி, |
|
யாழொடு
முகமன் பாணனும் நீயும், |
|
திருப்
பெறும் அயலவர் காண |
|
வரப்
பெறு மாதவம் பெரிது உடையேமே. |
|