82.
நெஞ்சொடு வருந்தல்
|
|
|
|
வடமொழி
மதித்த இசை நூல் வழக்குடன் |
|
அடுத்தன
எண்-நான்கு அங்குலியகத்தினும், |
|
நாற்பதிற்று
இரட்டி நால் அங்குலியினும், |
|
குறுமையும்,
நெடுமையும், கோடல் பெற்று; ஐதாய், |
|
ஆயிரம்
தந்திரி நிறை பொது விசித்து; |
5
|
கோடி
மூன்றில் குறித்து; மணி குயிற்றி; |
|
இரு
நிலம் கிடத்தி; மனம், கரம், கதுவ; |
|
ஆயிரத்து
எட்டில் அமைத்தன பிறப்பு, |
|
பிரவிப்
பேதத் துறையது போல, |
|
ஆரியப்
பதம் கொள் நாரதப் பேரியாழ் |
10
|
நன்னர்
கொள் அன்பால் நனிமிகப் புலம்ப-- |
|
முந்
நான்கு அங்குலி முழு உடல் சுற்றும், |
|
ஐம்பதிற்று
இரட்டி ஆறுடன் கழித்த |
|
அங்குலி
நெடுமையும் அமைத்து, உள் தூர்ந்தே, |
|
ஒன்பது
தந்திரி உறுத்தி, நிலை நீக்கி, |
15
|
அறுவாய்க்கு
ஆயிரண்டு அணைத்து வரை கட்டி, |
|
தோள்
கால் வதிந்து, தொழில்படத் தோன்றும் |
|
தும்புருக்
கருவியும் துள்ளி நின்று இசைப்ப-- |
|
எழு
என உடம்பு பெற்று, எண்பது அங்குலியின், |
|
தந்திரி
நூறு தழங்கு மதி முகத்த |
20
|
கீசகப்
பேரியாழ் கிளையுடன் முரல-- |
|
நிறைமதி
வட்டத்து முயல் உரி விசித்து, |
|
நாப்பண்
ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து, |
|
அந்
நரம்பு இருபத்தாறு அங்குலி பெற |
|
இடக்
கரம் துவக்கி, இடக்கீழ் அமைத்து, |
25
|
புற
விரல் மூன்றின், நுனிவிரலகத்தும், |
|
அறுபத்திரண்டு
இசை அனைத்து உயிர் வணக்கும் |
|
மருத்துவப்
பெயர் பெறும் வானக் கருவி, |
|
தூங்கலும்,
துள்ளலும், துவக்கி நின்று இசைப்ப-- |
|
நான்முகன்
முதலா மூவரும் போற்ற, |
30
|
முனிவர்
அஞ்சலியுடன் முகமன் இயம்ப, |
|
தேவர்கள்
அனைவரும் திசைதிசை இறைஞ்ச, |
|
இன்பப்
பசுங்கொடி இடப்பால் படர, |
|
வெள்ளிஅம்
குன்றம் விளங்க வீற்றிருந்த-- |
|
முன்னவன்
கூடல் முறைவணங்கார் என, |
35
|
அரவப்
பசுந் தலை, அரும்பு அவிழ் கணைக் கால், |
|
நெய்தற்
பாசடை நெடுங் காட்டு ஒளிக்கும் |
|
கண்
எனக் குறித்த கருங் கயல் கணத்தை, |
|
வெள்
உடல், கூர்வாய், செந் தாட் குருகினம், |
|
அரவு
எயிறு அணைத்த முள் இலை முடக் கைதைகள் |
40
|
கான்று
அலர் கடி மலர் கரந்து உறைந்து, உண்ணும் |
|
கருங்
கழி கிடந்த கானல்அம் கரைவாய், |
|
மெய்
படு கடுஞ் சூள் மின் எனத் துறந்தவர் |
|
சுவல்
உளைக் கவனப் புள் இயல் கலி மான் |
|
நோக்கம்
மிறைத்த பரிதி கொள் நெடுந் தேர்ப் |
45
|
பின்னொடும்
சென்ற என் பெரும் பிழை நெஞ்சம், |
|
சென்றுழிச்சென்றுழிச்
சேறலும் உளவோ? |
|
அவ்
வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ? |
|
இடை
வழி நீங்கி என் எதிர் உறுங்கொல்லோ? |
|
அன்றியும்,
நெடு நாள் அமைந்து உடன் வருமோ? |
50
|
யாது
என நிலைக்குவன்மாதோ-- |
|
பேதை
கொள்ளாது ஒழி மனம், கடுத்தே? |
|