83. கண் துயிலாது மொழிதல்
 
   
கடு வினை அங்குரம் காட்டி, உள் அழுக்காறு  
எண் திசைச் சாகை கொண்டு, இருள் மனம் பொதுளி,  
கொடுங் கொலை வடுத்து, கடும் பழிச் சடை அலைந்து,  
இரண்டு ஐஞ்ஞூறு திரண்ட அக் காவதம்  
சுற்றுடல் பெற்று, துணைப் பதினாயிரம்
5
மற்று அதின் நீண்டு மணி உடல் போகி,  
ஐம்பது-நூறுடன் அகன்று சுற்று ஒழுக்கி,  
பெருங் கவிழ் இணர் தந்து அவை கீழ்க் குலவிய  
அடல் மாக் கொன்ற நெடு வேற் குளவன்,  
குன்றவர் வள்ளிஅம் கொடியொடு துவக்கிப்
10
பன்னிரு கண் விரித்து, என் வினை துரக்கும்  
அருட் பரங்குன்றம் உடுத்து அணி கூடல்  
குறும் பிறை முடித்த நெடுஞ் சடை ஒருத்தனைத்  
தெய்வம் கொள்ளார் சிந்தை-அது என்னக்  
கிடந்த வல் இரவில், கிளர்மழை கான்ற
15
அவலும், உம்பரும், அடக்குபுனல் ஒருவி,  
தே அருள் கல்லார் சிந்தையின் புரண்ட  
கவலையும் காற் குறி கண்டு, பொழில் துள்ளும்  
இமையாச் சூரும் பல கண்டு, ஒருங்காத்  
துடியின் கண்ணும் துஞ்சாக் கண்ணினர்
20
கடியும் துனைவில் கையகன்று, எரிமணித்  
தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து,  
இணை முகப் பறை அறை கடிப்புடைத் தோகை  
வயிற்றுள் அடக்கி வளை கிடை கிடக்கும்,  
முழக்கி மெய் கவரும் முகக் கொலை ஞாளி
25
அதிர் குரைப்பு அடக்கி, இற்புறத்து அணைந்த நம்  
பூம் புனல் ஊரனை, பொருந்தா நெடுங் கண்  
அன்னையின் போக்கிய அரும் பெருந் தவறு--  
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும்  
மயங்காத் தேவர், மருந்து வாய்மடுக்க
30
முகம் கவிழ் வேலையில், அறம் குடிபோகிய  
மாய வல் அரக்கர், தட்டிக்  
காய் பார் உகுத்த விதி ஒத்தனவே.
உரை