84.
தலைவன் வரவு உரைத்தல்
|
|
|
|
நாற்
கடல் வளைத்த நானிலத்து உயிரினை, |
|
ஐந்தருக்
கடவுள், அவன் புலத்தினரை, |
|
நடந்து
புக்கு உண்டும், பறந்து புக்கு அயின்றும், |
|
முத்
தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும், |
|
நோன்
தலைக் கொடுஞ் சூர்க் களவு உயிர் நுகர்ந்த |
5
|
தழல்
வேற் குமரன் சால் பரங்குன்றம், |
|
மணியொடும்
பொன்னொடும் மார்பு அணி அணைத்த |
|
பெருந்
திருக் கூடல் அருந் தவர் பெருமான் |
|
இரு
சரண் அகலா ஒருமையர் உளம் என-- |
|
சுடர்
விளக்கு எடுமின்! கோதைகள் தூக்குமின்! |
10
|
பூவும்
பொரியும் தூவுமின்! தொழுமின்! |
|
சுண்ணமும்
தாதும் துனைத்துகள் தூற்றுமின்!-- |
|
கரும்
பெயல் குளிறினம் களி மயில் என்னக் |
|
கிடந்து
அயர்வாட்கு, முன் கிளர்வினைச் சென்றோர் |
|
உடல்
உயிர் தழைக்கும் அருள் வரவு உணர்த்த, |
15
|
முல்லைஅம்
படர் கொடி நீங்கி, பிடவச் |
|
சொரி
அலர் தள்ளி, துணர்ப் பொலம் கடுக்கைக் |
|
கிடைதரவு
ஒருவி, களவு அலர் கிடத்தி, |
|
பூவைஅம்
புடைமலர் போக்கி, அரக்கு அடுத்துக் |
|
கழுவிய
திரு மணி கால் பெற்றென்ன, |
20
|
நற்
பெருந் தூது காட்டும் |
|
அற்புதக்
கோபத் திருவரவு-அதற்கே. |
|