86. ஐயம் உற்று ஓதல்
 
   
பாசடைக் கருங் கழி படர் மணல் உலகமும்  
எழு மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி  
வரை உலகு அனைத்தும் வருவது போல,  
திரை நிரை திரைத்துக் கரை கரைக் கொல்லும்  
வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு
5
பொய்யினள் அன்றி மெய்யினை நீயும்;  
பொலம்பூண் பெயர்ந்து உறை பூணை; அருள்தரும்  
மலர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்து எனச்  
சேக்கொள் கண்ணை; செம்மொழிப் பெயர்தந்து  
ஒன்றுடன் நில்லா மொழியை; மதுத்த
10
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து  
கவிழ்ந்த முகத்தை; எம் கண் மனம் தோன்ற  
அரும்பிய நகையை அன்றே? நின் கெழு  
என்கண் கண்ட இவ் இடை, என் உளம்  
மன்னி நின்று அடங்காக் குடுமிஅம் பெருந்தழல்
15
பசுங் கடல் வளைந்து பருகக் கொதித்த  
தோற்றமும் கடந்தது என்றால், (ஆற்றல் செய்  
விண்ணகம் புடைத்து, நெடு வரை கரக்கும்  
கொடுஞ் சூர்க் கொன்ற கூர் இலை நெடு வேல்  
குன்றக் குறவர் கொம்பினுக்கு இனியோன்,
20
குருகு ஒலி ஓவாப் பனி மலர் வாவி  
வயிறு வாய்த்த குழவிஅம் கிழவோன்,  
வாழ் பரங்குன்று எனும், மணி அணி பூண்ட  
நான்மறை புகழும் கூடல் எம்பெருமான்  
வான்முதல் ஈன்ற மலைகள்தன்னொடும்,
25
முழுது உணர் ஞானம், எல்லாம் உடைமை,  
முழுது அனுக்கிரகம், கெழு பரம், அநாதி,  
பாசம் இலாமை, மாசு அறு நிட்களம்,  
அவிகாரக் குறி, ஆகிய தன் குணம்  
எட்டும் தரித்து; விட்டு, அறு குற்றமும்;
30
அருச்சனை, வணக்கம், பர உயிர்க்கு அன்பு அகம்,  
பேர் அருள் திரு நூல், பெருந் துறவு, எங்கும்  
நிறை பொருள் அழுந்தல், அருளினர்க் கூட்டம்,  
இருள் பவம் நடுங்கல், எனும் குணம் எட்டும்,  
தமக்கும் படைத்த விதிப் பேற்று அடியவர்
35
நிலை அருள் கற்பு என,) நெடுங் கற்பு உடையோள்  
முன் உறின், அவள் மனம் ஆங்கே  
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே?  
உரை