87.
தலைவனோடு ஊடல்
|
|
|
|
மாயமும்
இன்பும் மருட்சியும் தெருட்சியும் |
|
நகைத்தொகை
கூட்டிக் கவைத்து எழு சொல்லும், |
|
அமுதமும்
கடுவும் விழியில் வைத்து அளிக்கும் |
|
இருமனப்
பொய் உளத்து ஒரு மகள்தன்னை |
|
கரியோன்
கடுப்பத் துகில் கவர்ந்து, ஒளிர்அலர் |
5
|
விதியினும்
பன்மை செய்முகன் படைத்து, அளவாச் |
|
சோதியின்
படைக்கண் செல உய்த்து, அரும்புசெய் |
|
முண்டக
முலையில் சாந்து அழித்து, அமைத் தோள் |
|
எழுதிய
கழைக் கரும்பு எறிந்து, நூல் வளர்த்த |
|
கோதை
வகை பரிந்து, மணிக்கலன் கொண்டு, |
10
|
கழைத்
தோள் நெகிழத் தழை உடல் குழையத் |
|
திரையினைத்
தள்ளி, மலர்த்துகில் கண் புதைத்து, |
|
ஒள் நிற
வேங்கையின் தாதும் பொன்னும் |
|
சுண்ணம்-அவை
கலந்து திமிர்ந்து உடல் தூற்றி, |
|
வண்டொடு
மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி, |
15
|
இறால்
புணர் புதுத் தேன் ஈத்து, உடன் புணரும் |
|
அவ்வயின்,
மறித்தும் அன்னவள்தன்னுடன் |
|
கெழுமிய
விழவுள், புகுமதி நீயே-- |
|
(கவை
நாக் கட்செவி அணந்து இரை துய்த்த |
|
பாசுடற்
பகுவாய்ப் பீழைஅம் தவளையும், |
20
|
பேழ்வாய்த்
தழல்விழித் தரக்கு அடித்து அவிந்த |
|
நிலம்
படர் தோகைக் குலம் கொள் சேதாவும், |
|
அவ்வுழி
மாத்திரை அரை எழு காலை, |
|
திரு நுதற்கண்ணும்
மட மகள் பக்கமும் |
|
எரி மழு
நவ்வியும், பெறும் அருள் திரு உருவு |
25
|
எடுத்து,
உடன் அந்தக் கடுக் கொலை அரவினை, |
|
தீவாய்ப்
புலியினை, திருந்தலர் நகைப்ப |
|
எடுத்து
அணிபூண, உரித்து உடை உடுப்ப, |
|
முனிவரும்
தேவரும் கரமலர் முகிழ்ப்ப, |
|
தருவன
அன்றி--மலரவன்-அவன் தொழில், |
30
|
நாரணன்
ஆங்கு-அவன் கூருடைக் காவல், |
|
சேரத்
துடைக்கும் பேர் அருள் நாளினும், |
|
முத் தொழில்
தனது முதல் தொழில் ஆக்கி, |
|
ஒரு தாள்
தாரைகொள் முக் கவைச் சுடர் வேல்- |
|
தலை இருந்து,
அருங்கதி முழுது நின்று அளிக்கும் |
35
|
திரு நகர்க்
காசிப் பதியகத்து, என்றும் |
|
வெளியுறத்
தோன்றிய இருள் மணி மிடற்றோன்) |
|
நேமியங்குன்று
அகழ் நெடு வேற் காளையன்- |
|
தன் பரங்குன்றம்
தமர் பெறு கூடற்கு |
|
இறையோன்
திருவடி நிறையுடன் வணங்கும் |
40
|
பெரும்
புனல் ஊர! எம் இல் |
|
அரும்
புனல் வையைஅம் புது நீர் அன்றே. |
|