88.
உடன்பட உரைத்தல்
|
|
|
|
வேலிஅம்
குறுஞ் சூல் விளைகாய்ப் பஞ்சினம் |
|
பெரு
வெள்ளிடையில் சிறுகால் பட்டென, |
|
நிறை
நாண் வேலி நீங்கி, தமியே |
|
ஓர்
உழி நில்லாது, அலமரல் கொள்ளும் என் |
|
அருந்
துணை நெஞ்சிற்கு உறும் பயன் கேண்மதி: |
5
|
மண்ணுளர்
வணங்கும் தன்னுடைத் தகைமையும், |
|
இருள்
அறு புலனும், மெய்ப்பொருள் அறி கல்வியும், |
|
அமரர்
பெற்று உண்ணும் அமுது உருக் கொண்டு |
|
குறுஞ்
சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் |
|
விதலை
உள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும், |
10
|
நின்
நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும் |
|
துவருறத்
தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன், |
|
'பொம்மல்அம்
கதிர் முலை புணர்வுறும்கொல்?' எனச் |
|
சென்றுசென்று
இரங்கலை; அன்றியும், தவிர்மோ-- |
|
(நெட்டுகிர்க்
கருங் கால் தோல்முலைப் பெரும் பேய் |
15
|
அமர்
பெற்று ஒன்னலர் அறிவுறப் படர, |
|
பேழ்வாய்
இடாகினி கால் தொழுது ஏத்திக் |
|
கையடை
கொடுத்த வெள் நிண வாய்க் குழவி, |
|
ஈமப்
பெரு விளக்கு எடுப்ப, மற்று-அதன் |
|
சுடு
பொடிக் காப்பு உடல் துளங்க, சுரிகுரல் |
20
|
ஆந்தையும்
கூகையும் அணி ஓலுறுத்த, |
|
ஓரி
பாட்டு எடுப்ப, உவணமும் கொடியும் |
|
செஞ்
செவிச் சேவல் கவர் வாய்க் கழுகும் |
|
இட்ட
செய்பந்தர் இடைஇடை கால் என, |
|
பட்டு
உலர் கள்ளிஅம்பால், துயில் கொள்ளும் |
25
|
சுள்ளிஅம்
கானிடை, சுரர் தொழுது ஏத்த-- |
|
மரகதத்
துழாயும், அந் நிறக் கிளியும், |
|
தோகையும்,
சூலமும்; தோளில், முன்கையில், |
|
மருங்கில்,
கரத்தில், வாடாது இருத்தி, |
|
போர்
வலி அவுணர் புகப் பொருது உடற்றிய |
30
|
முக்
கண், பிறை எயிற்று, எண் தோட் செல்வி, |
|
கண்டு
உளம் களிப்ப--கனைகழல் தாமரை |
|
வானக-வாவியூடு
உற மலர, |
|
ஒரு
தாள் எழு புவி உருவ, திண் தோள் |
|
பத்துத்
திசையுள் எட்டு அவை உடைப்ப-- |
35
|
ஒரு
நடம் குலவிய திருவடி உரவோன்) |
|
கூடல்அம்
பதியகம் போற்றி |
|
நீட
நின்று எண்ணார் உளம் என நீயே. |
|