89. பாணனொடு வெகுளுதல்
 
   
உளம் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை,  
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகைக்  
குறுந் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ!  
கவிர் அலர் பூத்த செஞ் செம்மை வில் குடுமி,  
மஞ்சு அடை கிளைத்த வரிக் குறு முள்-தாள்
5
கூர்அரிவாளின், தோகைஅம் சேவற்  
கொடியோன் குன்றம் புடைவளர் கூடல்,  
கணிச்சி அம் கைத்தலத்து அருட் பெருங் காரணன்,  
உலகு உயிர் மகவுடைப் பசுங் கொடிக்கு ஒருபால்  
பகுத்து, உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய்த் துறவினன்,
10
முளரி நீர்ப் புகுத்திய பதமலர்த் தாள்-துணை  
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின்,  
வளர் மறித் தகர் எனத் திரிதரும் பாண்மகன்  
எனக் குறித்து அறிகிலம் யாமே: எமது  
மணி ஒளிர் முன்றில் ஒரு புடை நிலை நின்று,
15
அன்ன ஊரர் புல்லமும், விழுக் குடிக்கு  
அடாஅக் கிளவியும், படாக் கரும் புகழும்,  
எங்கையர் புலவியில் இகழ்ச்சியும், நம்பால்  
தனது புன் புகழ் மொழி நீளத் தந்தும்,  
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெறப் புனைந்து
20
கட்டிய பொய் பாப் புனைந்து நிற்கு உறுத்தின்--  
பேர் எழிற் சகரர் ஏழ் எனப் பறித்த  
முரிதிரை வடிக்கும் பரிதிஅம் தோழம்  
காட்டையுள் இம்பரும் காணத்  
தோட்டி நின்று அளக்கும் தொன்மை-அது பெறுமே.
25
உரை