9. அறத்தொடு நிற்றல்
 
 
தன்னுழைப் பல உயிர் தனித்தனி படைத்துப்  
பரப்பிக் காட்டலின், பதுமன் ஆகியும்;  
அவ் உயிர், எவ் உயிர், அனைத்தும் காத்தலின்,  
செவ்வி கொள் கரு முகிற் செல்வன் ஆகியும்;  
கட்டிய கரை வரம்பு உட்புக அழித்து,
5
நீர் தலை தரித்தலின், நிமலன் ஆகியும்;  
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்,  
அரி முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்;  
மூன்று அழல், நான்மறை, முனிவர் தோய்ந்து,  
மறை நிர் உகுத்தலின், மறையோன் ஆகியும்;
10
மீனும், கொடியும், விரிதிணை ஐந்தும்,  
தேன் உறை தமிழும், திரு உறை கூடலும்,  
மணத்தலின், மதிக் குல மன்னவன் ஆகியும்;  
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின்,  
வளர் குறி மயங்கா வணிகன் ஆகியும்;
15
விழைதரும் உழவும், வித்தும், நாறும்,  
தழைதலின், வேளாண் தலைவன் ஆகியும்;  
விரிதிரை வையைத் திரு நதி சூழ்ந்த  
மதுரை அம் பதி நிறை மைம்மலர்க் களத்தினன்--  
இணை அடி வழுத்தார் அணை தொழில் என்ன,
20
கைதைஅம் கரை சேர் பொய்தற்பாவையோடு,  
இரு திரை எடுக்கப் பொருதிரை எடுத்தும்,  
பூழிப் போனகம் பொதுவுடன் உண்டும்,  
சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும்,  
முட உடற் கைதை மடல் முறித்திட்டும்,
25
கவைத் துகிர்ப் பாவை கண்ணி சூடக்  
குவலயத் திரு மலர் கொணர்ந்து கொடுத்தும்,  
நின்றான் உண்டு ஒரு காளை;  
என்றால், இத் தொழில் செய்வது புகழே?  
உரை