9. அறத்தொடு நிற்றல்
|
|
|
|
தன்னுழைப்
பல உயிர் தனித்தனி படைத்துப் |
|
பரப்பிக்
காட்டலின், பதுமன் ஆகியும்; |
|
அவ்
உயிர், எவ் உயிர், அனைத்தும் காத்தலின், |
|
செவ்வி
கொள் கரு முகிற் செல்வன் ஆகியும்; |
|
கட்டிய
கரை வரம்பு உட்புக அழித்து, |
5
|
நீர்
தலை தரித்தலின், நிமலன் ஆகியும்; |
|
தருவும்
மணியும் சங்கமும் கிடைத்தலின், |
|
அரி
முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்; |
|
மூன்று
அழல், நான்மறை, முனிவர் தோய்ந்து, |
|
மறை
நிர் உகுத்தலின், மறையோன் ஆகியும்; |
10
|
மீனும்,
கொடியும், விரிதிணை ஐந்தும், |
|
தேன்
உறை தமிழும், திரு உறை கூடலும், |
|
மணத்தலின்,
மதிக் குல மன்னவன் ஆகியும்; |
|
நவ
மணி எடுத்து நல் புலம் காட்டலின், |
|
வளர்
குறி மயங்கா வணிகன் ஆகியும்; |
15
|
விழைதரும்
உழவும், வித்தும், நாறும், |
|
தழைதலின்,
வேளாண் தலைவன் ஆகியும்; |
|
விரிதிரை
வையைத் திரு நதி சூழ்ந்த |
|
மதுரை
அம் பதி நிறை மைம்மலர்க் களத்தினன்-- |
|
இணை
அடி வழுத்தார் அணை தொழில் என்ன, |
20
|
கைதைஅம்
கரை சேர் பொய்தற்பாவையோடு, |
|
இரு
திரை எடுக்கப் பொருதிரை எடுத்தும், |
|
பூழிப்
போனகம் பொதுவுடன் உண்டும், |
|
சாய்
தாள் பிள்ளை தந்து கொடுத்தும், |
|
முட
உடற் கைதை மடல் முறித்திட்டும், |
25
|
கவைத்
துகிர்ப் பாவை கண்ணி சூடக் |
|
குவலயத்
திரு மலர் கொணர்ந்து கொடுத்தும், |
|
நின்றான்
உண்டு ஒரு காளை; |
|
என்றால்,
இத் தொழில் செய்வது புகழே? |
|