90. பாணன் புலந்து உரைத்தல்
 
   
இலவு அலர் தூற்றி, அனிச்சம் குழைத்து,  
தாமரை குவித்த காமர் சேவடித்  
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ:  
எல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்,  
தன்னுள் தோன்றித் தான் அதில் தோன்றாத்
5
தன்னிடை நிறையும் ஒரு தனிக் கோலத்து,  
ஒரு வடிவு ஆகிய பழ மறை வேதியன்;  
(நான்மறைத் தாபதர் முத் தழற்கனல் புக்கு  
அரக்கர் துய்த்து உடற்றும் அதுவே மான,  
பாசடை மறைத்து எழு முளரி அம் கயத்துள்
10
காரான் இனங்கள் சேடு எறிந்து உழக்கும்  
கூடற்கு இறையவன்;) காலற் காய்ந்தோன்;  
திரு நடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை,  
எங்கையர் குழுமி, "எமக்கும் தங்கையர்ப்  
புணர்த்தினன் பாண் தொழில் புல்லன்" என்று, இவனை,
15
கோலின், கரத்தின், தோலின், புடைப்ப--  
கிளை முள் செறித்த வேலிஅம் படப்பைப்  
படர் காய்க்கு அணைந்த புன் கூழைஅம் குறு நரி,  
உடையோர் திமிர்ப்ப, வரும் உயிர்ப்பு ஒடுக்கி  
உயிர் பிரிவுற்றமை காட்டி, அவர் நீங்க
20
ஓட்டம் கொண்டன கடுக்கும்--  
நாட்டவர் தடைய, மற்று, உதிர்த்து நடந்ததுவே!  
உரை